Friday, May 3, 2024
Home > #பெண் (Page 5)

புன்னகையே உனதழகு… – #கவிதை

இதுவரை நான் உன்னை இவ்வளவு அமைதியாய் பார்த்ததில்லை... அது நன்றாகவுமில்லை... நீ இப்படி இருப்பது எனக்கு பிடிக்கவுமில்லை... ஏன் எதையோ பறிகொடுத்ததைப் போலவே இருக்கிறாய்... ஏன் எதையோ தொலைத்ததைப் போலவே நடந்துக்கொள்கிறாய்... உன் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கையில்... தவறாய்... மாபெரும் தவறாய்... சொல்லித் தொலைத்துவிட்டேன... என் காதலை... உன்னிடம்... அதனால் வந்த கோபம் உன் முகத்திற்கு அழகுதான்... ஆனால்... உன் புன்னகையே உன் உள்ளத்திற்கு அழகு... சில நாட்களாய்... தீவிரமாய் தேடிக்கொண்டிருக்கிறேன்... உன்னையே உன்னிடம்... உன் முகத்தில் கவலை ரேகையே எனக்குத் தெரிகிறது...   என்னை நீ வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே... ஆனால்... நீயோ காதலில் தோற்றவள்

Read More

அவளையே நினைத்து நினைத்து

காதலில் தோற்பது எனக்கு புதிதல்ல... என்னை வேண்டாம் என்று சொல்லாத பெண்ணல்ல... காதலியை மறப்பது எளிதல்ல... புதிய காதலையை தேடுவதும் கஷ்டமுமல்ல... காதல் அவிழ்க முடியாத புதிருமல்ல... பெண்களின் மனம் கல்லுமல்ல... காத்திருப்பதைத் தவிர வேறுவழியுமல்ல... பெண்ணின் பதிலுக்காக காத்திருப்பதைப் போன்ற சுகமுமல்ல...   அவளும் இன்னும் காத்திருந்தாள் திருமணத்திற்கு... இதுவரை மாப்பிள்ளையே கிடைக்கவில்லை அவளுக்கு... அவளை ஏனோ பிடித்திருந்தது என் உள்ளத்திற்கு... இன்னும் ஒரு நாளே இருந்தது காதலர் தினத்திற்கு... காதலை அன்றே சொல்லலாம் என்று தோன்றியது மனதிற்கு... எழுதினேன் ஒரு காதல் கடிதம் அவளுக்கு... வாங்கினேன் ஒரு சிவப்பு

Read More

தினமும் காதலில்…

என் உறவே... நிலவின் அழகே... என்னுயிரின் கருவே... நிலவைப் போல என்னருகில் வருகிறாய்... என்னைக் கண்டதும் பெளர்ணமியாய் மிளிர்கிறாய்... நானில்லா நாட்களில் அமாவாசையாய் இருண்டுப்போகிறாய்...   வியக்கிறேனடி... உன் சூரியனா??? நான் என்று.... அருகில் வர வர மிளிர்கிறாய்... விலக விலக இருள்கிறாய்... உணர்கிறேனடி நான்... எந்தன் நிலவு நீயடி என்று...   நாம் படும்பாடு... எல்லாம் காதலில் வெளிப்பாடு... உந்தன் சூரியனாய் நான் வருவேன்... எந்தன் நிலவாய் நீ வருவாய்... அதுவரை காத்திரு பெண்ணே... அமாவாசையில் ஊடலும்... பெளர்ணமியில் கூடலும்... கொள்வோமடி...   காதலே நம் சக்தி... சீக்கிரம் வகுக்கிறேன் ஒரு யுக்தி... அதுவரை... திளைத்திருப்போம்... தினமும் காதலில்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… பிப்ரவரி 10, 2020 காலை

Read More

அவள் யாரோ…

அவள் யார் என்று தெரியாது... அங்கு, நான் தேடி வந்தவனும் கிடையாது... அவள், மாடிப்படியில் அமர்ந்திருந்தாள்... கண்களில் கண்ணீருடன்... அவளருகில் நான் சென்றேன்... என்னை கண்டுகொண்டவள், அழுதாள், இன்னும் கனமாக... என் மனம் வாடியது, இதைக் கண்டு... அவள் அருகில் சென்றமர்ந்தேன்... அழுகை வேண்டாம் பெண்ணே என்றேன்... எதற்கும் கலங்காதே... அச்சம் தவிர் பெண்ணே என்றேன்... பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்... மீண்டு வா கண்ணே என்றேன்... சொல்லி முடிப்பதற்குள்... என் மடியிலே சாய்ந்து அழுதாள்... என் கண்களும் கலங்கியது... அடக்கிக்கொண்டேன் நான் கண்ணீரை... ஆறுதலாய் இருந்திருக்கும்... அது அவளுக்கு... என் மடியிலே படுத்து அழுதாள்...

Read More

தெருவோரக் காதலா…

என் தெருவோரக் காதலா... நீ தான் இனி எனக்கு உலகம்... நீ கொஞ்சம் சரிந்துதான் விட்டாய் என் கண்ணா... நீ தோற்கவில்லையே என் மன்னா... நான் இருப்பேன் இனி உன் பின்னால்... வெற்றிகள் குவியும் இனி உன் முன்னால்...   மாட மாளிகையின் நாயகன் வேண்டாம்... என் மனதை வென்ற நாயகனே நீ மட்டுமே வேண்டும்... எனக்கு... என் இணையாய்... என் உயிராய்... என் துணையாய்...   உன்னை நினைத்தாலே அது எனக்கு திருவிழா... அதில், நீ இருக்கிறாய்... தேரின் நடுவிலே... நமக்கு எப்போது நடக்கும் மணவிழா... அப்போது முதல் நீ இருப்பாய் எந்தன்

Read More