Saturday, April 27, 2024
Home > இலக்கு

வரையறை

 வரையறைகளின் சுருக்கம் இதோ. ”சரியான தரவுகளின் (Source) அடிப்படையில் மட்டுமே இந்தப் பட்டிக்காடு தளத்தில் ஒரு சம்பவம், பேட்டி, விபத்து, கொண்டாட்டம், வெற்றி, தோல்விப் பற்றி கருத்துப் பகிரப்படும்” - அவசரமில்லாமல் அசரடிப்போம். வாசகர்களை, உண்மைக்கு மிக அருகில், கொண்டு சேர்ப்பதே இத்தளத்தின் பாணி. உண்மைகள் இது தான் என்று முடிவு செய்வது வாசகராகத் தான் இருக்க வேண்டும். அப்போது தான் சமூக மேம்பட்டுக் கொண்டிருக்கிறது என அர்த்தம்” -

Read More

வரலாறு

     வரலாறு என்பது மிக முக்கியம் தான். ஆனால் அது யாருக்கு முக்கியம் என்பதில் தான் பிரச்சனை. ஏன் வரலாறு மட்டும் எப்போதும் சர்ச்சைக்கு உட்பட்டே இருக்கிறது. ஏன்னென்றால், வரலாறு என்பது சுயபுராணமாகவோ விமர்சனமாகவோ தான் எப்போதும் இருக்கிறது, இருக்கும். எங்கே சுயபுராணமும், விமர்சனமும் இருக்கிறதோ, அங்கே நிச்சயம் சர்ச்சைக்கும் குழப்பங்களுக்கும் இடமிருக்கும். ஏன் வென்றவன் எழுதிய வரலாறு மட்டும் காலம் தாண்டியும் நிற்கின்றது? ஏன் பெண்களின் வாழ்க்கையைப் பற்றி வரலாற்றில்

Read More

திணிப்பு

     பெரியார் ஒருமுறை சொன்னார், “எனது உரைநடைகளில் வரும் எந்தக் கருத்தையும் அப்படியே ஏற்க வேண்டாம்; சிந்தித்து சரியெனப்பட்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்”. எனக்கு தெரிந்த வரைவில், இதனையொட்டிய கருத்தை சொன்ன இன்னொரு நபர் காந்தியடிகள் மட்டுமே. அவர்கள் ஏன் அப்படி சொல்ல வேண்டும்? காரணமில்லாமல் இல்லை, எந்த ஒரு சமுதாயத்தில் சுய சிந்தனையும் சமத்துவமும் மேலோங்கியிருக்கிறதோ அங்கே திணிப்பிற்கு வேலை இருக்காதல்லவா! ஆகவே தான் அவர்கள் இருவரும் தங்களின்

Read More

அடையாளம்

     அடையாளம் என்பதற்கு இரண்டு வகையான அர்த்தம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. தனி மனிதனின் அடையாளம் என்பது எனது முதல் பார்வை, மற்றொன்று ஒருவருக்கு கிடைக்கும் புகழ் சம்மந்தப்பட்டது.      தனி மனித அடையாளம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. தன் அடையாளத்தை வெளிகாட்ட வேண்டுமா என்பதை சம்மந்தப்பட்ட நபர் தான் தேவையான சமயங்களில் முடிவு செய்ய வேண்டும். இது ஒருபுறம் இருக்க மற்றொரு அடையாளத்திற்கு வருவோம்.      புகழ் மூலமாக கிடைக்கும்

Read More

உண்மைக்கு மிக அருகில்

உண்மை. இந்த வார்த்தைக்கு அகராதியில் என்ன அர்த்தம் என்று தெரியுமா? பொய் அல்லாதது, மறுக்க முடியாதது அல்லது சத்தியமானது, இவை தான் உண்மையின் உண்மையான அர்த்தம். இன்று, நமக்கு வரும் செய்திகளில் யாவும் நம்பகத்தண்மை வாய்ந்தவையா? என கேள்வி எழுகிறது. ஆனால் உண்மையான ”உண்மை” ஒரு சிலருக்கு மட்டுமே அதுவும் காலம் கடந்த பிறகே தெரிய வருகிறது. ஒவ்வொரு உண்மையிலும் ஒரு பொய் ஒளிந்திருக்கிறது. அதேசமயம் ஒவ்வொரு பொய்யிலும் ஒரு உண்மை

Read More