Saturday, April 27, 2024
Home > பெண்

கேட்கிறேன் பாவமன்னிப்பு… மணிப்பூருக்காக – #கவிதை

ஆடையில்லாமல் ஓடவிட்டார்கள்... ஜாதியின் பெயராலும், இறைவனின் பெயராலும்... தடுக்க வரவில்லை... இராமனும்... அல்லாவும்... ஏசுவும்... ஆயிரம் ஆயிரம் வக்கிரம் கொண்ட கண்கள் ரசித்திருக்கும்... அந்த பெண்களின் அந்தரங்கங்களை... ஆனாலும் கோடிக்கணக்கான மனங்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் உலகெங்கும்... நடந்ததை நினைத்து நினைத்து வருந்தியிருக்கும்... கண்ணில்லாமல் போனது அரசுக்கு... கலவரம் தேவையாய் இருந்தது ஆட்சிக்கு... இது தவறென்றே தெரியாமல் போனது மனித அறிவிற்கு... போகிறதே மனிதகுலம் அழிவிற்கு.. யாரெல்லாம் பொறுப்பு கலவரமான செயலுக்கு... களங்கமே ஏற்ப்பட்டதே இந்திய நாட்டின் புகழுக்கு... இனி கிடைக்குமா மரியாதை இந்தியர் என்னும் பெயருக்கு... ஏன் என்ற கேள்விக்கு? இராமனுக்கு... அல்லாவிற்கு... ஏசுவிற்கு... ஜாதிக்கு... என்கிறார்கள் மனசாட்சியேயில்லாமல் இன்றைக்கு... மனித செயலுக்கு இறை

Read More

பெண்கள் தினமாம்… – #கவிதை

பெண்கள் தினமாம்... பெண்கள் தினமாம்... ஆண்டுதோறும் கேலிக்கூத்தான வியாபாரமாக மாறிவிட்ட பெண்கள் தினமாம்... பெண்ணிற்கு அந்த ஒரு நாள் மட்டும் தான் கொண்டாட்டமா? மற்ற எல்லா நாட்களிலும் பெண்ணிற்கு என்ன திண்டாட்டமா? பெண்ணிற்கு தனியாக தினம் வைத்துக் கொண்டாடும் சமூகமே... பெண்ணிற்கு என்று... எப்போது தரப்போகிறாய்... பாதுக்காப்பை...? எப்போது தரப்போகிறாய்... உடல் சுதந்திரத்தை...? எப்போது தரப்போகிறாய்... பெண்ணுரிமை...? எப்போது தரப்போகிறாய்... உண்மையான சொத்துரிமை...? எப்போது தரப்போகிறாய்... வாழ்க்கைத்துணைத் தேர்வுரிமை...? எப்போது தரப்போகிறாய்... அரசியலுரிமை...? எப்போது தரப்போகிறாய்... முழு சுதந்திரம்...? அதுவரை... வேண்டாமே ஆண்டிற்கொரு முறை பெண்கள் தினம்... எப்போதும் வேண்டாமே... ஆணிற்கென்று தனியொரு தினம்... ஆண் பெண்ணாக முடியாது... பெண் ஆணாகவும் முடியாது... ஆனாலும்

Read More

உதவிகேட்ட உன்னை… #Priyanka #JusticeForPriyanka

உதவிகேட்க வைத்து... உதவிகேட்ட உன்னை... உடைகளைக் களைந்து... உன் அனுமதியின்றி... உன்னுடலின் உள்ளே... ஊடுருவி விட்டார்களே... உயிரையும் எடுத்துவிட்டார்களே... கரிக்கட்டயாய் கிடந்தாயே... என் நாட்டின் திருமகளே...   நயவஞ்சகர்களின் நரித்தனத்திற்கு நீ பலியாகிவிட்டாயே... உன்னை கசக்கி எறிந்துவிட்டார்களே... உன்னுடலில் அவர்களின் நஞ்சைவிதைத்து... உன்னையும் கொன்று எரித்துவிட்டார்களே...   வீறு கொண்டு நீ வருவாய்... அவர்களிடம் நியாயம் கேட்க வருவாய்... என்ற பயத்திலே... கோழைத்தனமாய்... உன்னுயிரையும் பறித்துவிட்டார்களே...   நல்லவர்கள் இங்கு சிலரே... அத்துமீற துடிப்பவர்கள் இங்கு பலரே... மாட்டிக்கொண்டவர்கள் இங்கு சிலரே... நல்லவர் வேடமிடுபவர்கள் இங்கு பலரே... நீதியின் முன் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிலரே... நீதியாலே தப்பித்தவர்கள் இங்கு பலரே... பாலியல் தீண்டலுக்கு ஆளாத பெண்கள் இங்கு சிலரே... அநீதியிளைக்கப்பட்ட

Read More

கருப்பி… என் கருப்பி… – #சிறுகதை

என்னை வைத்து ருத்ரதாண்டவம் ஆடியிருந்தார் எனது மேனேஜர். எப்போதும் ரிவியூ மிட்டிங்கில் நான் எப்படியாவது தப்பிவிடுவேன். இந்த முறை கோபி பைய என்னை வசமாக சிக்க வைத்துவிட்டு ஓடிவிட்டான். நானும் அவனும் டீம் லீட்ஸ். நாங்கள் ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு. இருந்தாலும் இந்த நிறுவனத்தில், நான் அவனுக்கு சீனியர். ஆனால், அவன் சம்பள விசியத்தில் எனக்கு சீனியர். வேலையில் படு கில்லி. இந்த முறை ஏதோ வசமாக சொதப்பிவிட்டான்.

Read More

நான் மறைத்த #MeToo

#MeToo என்ற பெயரில் பாலியல் அத்துமீறல்கள் பற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது சமூக வலைதளங்களில் புகார்களை தெரிவித்து வருகின்றனர். அதில் பலர் நாம் வாழும் சமுதாயத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்கள். அரசியல், விளையாட்டு, கல்விக்கூடங்கள், சினிமா, கார்பரேட் நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும், எல்லா மட்டங்களிலும் இப்படியான குற்றச்சாட்டுகள் பல வெளிவந்திருக்கின்றன. இன்னும் மறைக்கப்பட்ட சம்பவங்கள் கவலைப்படும் அளவிற்கு மிகமிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அப்படி, நான் மறைத்த ஒரு பாலியல்

Read More