Saturday, March 7, 2026
Home > #பெண்

தனியாய் இங்கே சாக… – #கவிதை

புயலாய் தேடி வந்தாள்... பாச மழையாய் கொட்டித் தீர்த்தாள்... அவளில்லாமல் காயமாய் இருந்த மனதை, அன்பால் நிறைத்தாள்... இனி வாழ்நாளும்... எந்நாளும்... எந்நிலையிலும்... என்னுடனே இருப்பேன் என்றாள்.. ஏனோ... என் மீது இவ்வளவு பாசம் வைக்கிறாள்... ஆனால்... மீண்டும் என்னைவிட்டுச் சென்றாள்... என்னை விட்டுச் செல்வதில் அவளுக்கு, அவ்வளவு இன்பமெனில்... அவள் என்னை ஆயிரம் ஆயிரம் முறை விட்டுச் செல்லட்டும்... என்னை அவள் ஒவ்வொருமுறை விட்டுச் செல்லும் வேளையிலும், பெரின்பம் காண்பாய் எனில், அடி பெண்ணை என்னை ஆசை தீர விட்டுச் செல்லடி பெண்ணே... அது எத்தனை முறையானாலும்... காயம் என்னோடு... சூரியன் உதிக்க மறக்கலாம்... நதிகள் ஓட மறக்கலாம்... அலைகள் அடிக்க மறக்கலாம்... இலைகள் காற்றில்

Read More

பொண்டாட்டி சார் – #சிறுகதை

“என்னாது?” “ஓ அத உனக்கு அனுப்பிட்டேனா?” “சாரி” “சாரி” “அத என் டீம்ல இருக்கற பொண்ணுக்கு அனுப்பறதுக்கு உனக்கு அனுப்பிட்டேன்” “சாரி டா” “சரி விட்டுத் தொல” “ப்ளிஸ் மன்னிச்சு” ***** “ஒண்ணும் புரியல” “இட்ஸ் டூ இண்டர்பிரட்” “இதுல என்னத்த இண்டர்பிரட் பண்ணனும்” “அது நல்லா இருக்குனு வெச்சது, நீ ஃபிர்யா விடு” “என்னத்தயோ சொல்லிட்டு திரியுற” ***** “யாருக்கோ தகவல் கொடுக்கறனு மட்டும் தெரியுது” “ஆனா யாருக்குனு தெரியல” “எனக்கு ஒன்னும் புரியல” “பட். கீப் கோயீங்” “லூசு” “அது ஒரு சைக்காலஜி ஸ்டேட்டஸ்” “ஓ நீ அப்படி சொல்ற” “அட ஆமா பா ஆமா” ***** “இரு படிச்சிட்டு சொல்றேன்” “ஏன்

Read More

தண்ணீரில் நான் பார்த்த முகம் – #சிறுகதை

என் மச்சினிச்சியின் (மனைவியின் பெரியப்பா பெண்) திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சேலத்திலிருந்து திருச்செங்கோடு செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன். நான் ஒரு சிறு தொழில் செய்து வாருகிறேன். தொழில் நிமித்தமாக எதிர்பாராதல் வந்த ஒரு வேலையால், சென்னை சென்று புதிய சேலை மாதிரிகளை காட்டி, வாடிக்கையாளரிடம் சம்மதம் வாங்கினால் மட்டுமே உற்பத்தியை தொடங்க வேண்டும் என்ற நிலை. என் வேளையாட்களை யாரையேனும் அனுப்பி வைக்கலாம் என்றால், அவர்கள் ஏதாவது தவறாக புரிந்துக்கொண்டு

Read More

அவன் என்னவன்… – #கவிதை

அவன் காதலை ஏற்றுக்கோள்வோம் என்று நினைத்ததில்லை... அவனை ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியவில்லை... அவன் வருகைக்காக ஏன் இப்படி காத்திருந்தேன் என்று புரியவில்லை... அவனை காணாத நாட்களில் வரும் அழுகையை கூட துடைத்ததில்லை... அவன் எனக்கானவன் என்பதில் துளியும் சந்தேகமில்லை... அவன்... அவன்... அவன்... அவன் என்னவன்... ஆனால்...   அவனுக்காக என் பெற்றோரை விட்டுவிலக மனமில்லை... அவனுக்காக என் வீட்டில் நான் உறுதியாய் போராடவில்லை... அவனுக்காக என் வீட்டாரை கூட சமாளிக்க இயலவில்லை... அவனில்லா... ஓர் வாழக்கையை நினைத்துப் பார்த்ததேயில்லை... அவனில்லா... துடிக்கும் என் இதயத்தை யாரும்

Read More

கேட்கிறேன் பாவமன்னிப்பு… மணிப்பூருக்காக – #கவிதை

ஆடையில்லாமல் ஓடவிட்டார்கள்... ஜாதியின் பெயராலும், இறைவனின் பெயராலும்... தடுக்க வரவில்லை... இராமனும்... அல்லாவும்... ஏசுவும்... ஆயிரம் ஆயிரம் வக்கிரம் கொண்ட கண்கள் ரசித்திருக்கும்... அந்த பெண்களின் அந்தரங்கங்களை... ஆனாலும் கோடிக்கணக்கான மனங்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் உலகெங்கும்... நடந்ததை நினைத்து நினைத்து வருந்தியிருக்கும்... கண்ணில்லாமல் போனது அரசுக்கு... கலவரம் தேவையாய் இருந்தது ஆட்சிக்கு... இது தவறென்றே தெரியாமல் போனது மனித அறிவிற்கு... போகிறதே மனிதகுலம் அழிவிற்கு.. யாரெல்லாம் பொறுப்பு கலவரமான செயலுக்கு... களங்கமே ஏற்ப்பட்டதே இந்திய நாட்டின் புகழுக்கு... இனி கிடைக்குமா மரியாதை இந்தியர் என்னும் பெயருக்கு... ஏன் என்ற கேள்விக்கு? இராமனுக்கு... அல்லாவிற்கு... ஏசுவிற்கு... ஜாதிக்கு... என்கிறார்கள் மனசாட்சியேயில்லாமல் இன்றைக்கு... மனித செயலுக்கு இறை

Read More