Sunday, May 5, 2024
Home > #கவிதை (Page 5)

உனக்காகக் காத்திருப்பேன்… – #கவிதை

இவ்வளவு நாள் ஏன் என் கனவில் வரவில்லை என... உன்னை கோபித்துக்கொள்வதா...? இல்லை... இப்போது ஏன் மீண்டும் என் கனவில் வந்தாய் என... உன்னை கோபித்துக்கொள்வதா...? வேண்டாம் என்று சொல்லிவிட்டாய் நீ... என்னை... தொந்தரவே செய்யவில்லை அதன் பின்னே நான்... உன்னை... ஏதோவொரு சக்தி சேர்த்துவைக்க நினைக்கிறதா...? நம்மை... என் எனக்கு இப்படியொரு... நிலைமை... உன்னை நினைத்தாலே என் மனம் ஏனோ... வலிக்கிறதே... உன்னை மீண்டும் மீண்டும் நினைக்க என் மனம் ஏனோ... துடிக்கிறதே... ஒதுங்கித்தானே இருந்தேன் இவ்வளவு நாள் உன்னைவிட்டு... ஏன் பேசினாயோ என்னிடம் உன் மெளனத்தை கலைத்திவிட்டு... இப்போது... மீண்டும் மெளனமாகிவிட்டாயே என்னை புலம்ப விட்டுவிட்டு... என்ன

Read More

மீளாத் துயிலில் நீங்கள்… மீளாத் துயரில் நாங்கள்…

என் அறையிலிருந்து எட்டிப் பார்த்தேன்... நீங்கள்... எங்கள் கல்லூரி விடுதி மேலாளரிடம் பேசிக்கொண்டிருந்தீர்... நான் உங்களை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன்... நான் உங்களைப் பார்த்ததை நீங்கள் பார்த்தீர்... என்னை அழைத்தீர்... தாயில்லா என் மகனை இந்த விடுதியில் விட்டுச் செல்கிறேன்... என்றீர்... அவனையும் கொஞ்சம் அரவனைத்துக்கொள்ளப்பா என்றீர்... அவனுடன் நட்பு பாரட்டப்பா என்று கேட்டுக்கொண்டீர்... என்னை மன்னியும் அப்பா... தங்கள் மகனிடம் நட்பு பாரட்டியதை விட... வாக்கு வாதம் செய்ததே அதிகம்.... ஆனாலும்... அவன் விடுதியில் இருந்த வரை... நான் அவனைப் பார்த்துப் பேசாத நாளில்லை... எவ்வளவு சண்டையிட்டாலும் நாங்கள்

Read More

பெண்கள் தினமாம்… – #கவிதை

பெண்கள் தினமாம்... பெண்கள் தினமாம்... ஆண்டுதோறும் கேலிக்கூத்தான வியாபாரமாக மாறிவிட்ட பெண்கள் தினமாம்... பெண்ணிற்கு அந்த ஒரு நாள் மட்டும் தான் கொண்டாட்டமா? மற்ற எல்லா நாட்களிலும் பெண்ணிற்கு என்ன திண்டாட்டமா? பெண்ணிற்கு தனியாக தினம் வைத்துக் கொண்டாடும் சமூகமே... பெண்ணிற்கு என்று... எப்போது தரப்போகிறாய்... பாதுக்காப்பை...? எப்போது தரப்போகிறாய்... உடல் சுதந்திரத்தை...? எப்போது தரப்போகிறாய்... பெண்ணுரிமை...? எப்போது தரப்போகிறாய்... உண்மையான சொத்துரிமை...? எப்போது தரப்போகிறாய்... வாழ்க்கைத்துணைத் தேர்வுரிமை...? எப்போது தரப்போகிறாய்... அரசியலுரிமை...? எப்போது தரப்போகிறாய்... முழு சுதந்திரம்...? அதுவரை... வேண்டாமே ஆண்டிற்கொரு முறை பெண்கள் தினம்... எப்போதும் வேண்டாமே... ஆணிற்கென்று தனியொரு தினம்... ஆண் பெண்ணாக முடியாது... பெண் ஆணாகவும் முடியாது... ஆனாலும்

Read More

அது தான் காதல் – #கவிதை

கெஞ்சினாலும் வராது... கொஞ்சினாலும் வராது... மிரட்டினாலும் வராது... மயக்கத்தினாலும் வராது... கத்தினாலும் வராது... கதறினாலும் வராது... பேசினாலும் வராது... பேசாவிடினும் வராது... பார்த்தாலும் வராது... பார்த்துக்கொண்டேயிருந்தாலும் வராது... பார்க்காவிட்டாலும் வராது... அது... வருவதும் தெரியாது... அது... வந்ததுக் கூட தெரியாது... அது... வருவதைத் தடுக்கவும் முடியாது... அது... வருவதைத் தவிர்க்கவும் முடியாது... அது... போவதையும் தடுக்க முடியாது... அது... போனால் போனது தான்... அதனைக் காக்கவும் முடியாது... அதனைக் காப்பாற்றவும் முடியாது... அது... சொல்லிவிட்டும் போகாது... அது... சொல்லிவிட்டும் வராது... அது தான் காதல்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… மார்ச் 07, 2020 காலை 09.48 மணி…

Read More

அழைத்துவிடாதே… உன் திருமணத்திற்கு… – #கவிதை

தினமும் கனவொன்று காண்கிறேன்... அந்தக் கனவிலே... என் கையில்... நமது செல்லப் பெண் குழந்தையிருக்கிறது... உன்னை மருத்துவமனையினுள் அழைத்துச் செல்கின்றனர்... இரண்டாவது பிரசவத்திற்கு... என் முகமெல்லாம் கவலை ரேகைகள்... சில நிமிடங்களில்... கையில் தவிழும் ஆண் குழந்தையுடன்... வருகிறாள் ஒரு செவிலியர்... நம் மகன்... உன்னைப் பார்க்க என்னை உள்ளே அனுமதிக்கிறார்கள்... நீ பிரசவம் முடிந்து உறங்கிக் கொண்டிருக்கிறாய்... என் கண்ணே... உன் உச்சந்தலையில் முத்தமொன்று தருகிறேன்... அந்த நொடியில்... விழித்துக்கொள்கிறேன்... நான்... தினமும் இதே இடத்தில்... தினம் தினம் இதே கனவு என்னை எழுப்பிவிட்டு விடுகிறது... ஆழ்ந்த உறக்கத்திலிருந்து... கனவுலகிலே... உன்னை என் பொண்டாட்டியாய் நினைத்து வாழ்ந்துவிட்டேன்... குடும்பமே நமக்கு இருக்கிறது

Read More