Saturday, March 7, 2026
Home > #காதல்_தோல்வி (Page 4)

மன்னித்துவிடு… இல்லையேல் தண்டித்துவிடு… – #கவிதை

ஒரு ஆண் செய்யும் பெரும்பாவம், ஒரு பெண்ணின் கண்களில் கண்ணீர் சிந்த வைப்பது... அந்தப் படுபாவத்தை நான் செய்துவிட்டேன்... என் மனசாட்சி என்னை மன்னிக்கவில்லை... அவள்... எந்தத் தவறும் செய்யவில்லை... என் மீது குற்றமிருந்தும், எந்தக் குற்றமும் சுமத்தவில்லை... நான் செய்த தவறைப் பற்றி, அவள் யாரிடமும் மூச்சே விடவில்லை... அதற்காகவே தான் நான் அவளை தண்டித்தேனா? என் வார்த்தைகள், அவள் நெஞ்சை எவ்வளவுக் காயப்படுத்தியிருக்கும்... என் கோபம், அவளை எவ்வளவு வாட்டியிருக்கும்... எனது அவசர முடிவு, அவளை எவ்வளவு வருத்தியிருக்கும்... தவறேதும் செய்திராத ஒரு பெண்ணை

Read More

தியாகத்திற்கு… துரோகம் செய்தேன்… – #கவிதை

நல்ல உள்ளம் கொண்டவள் அவள்... எனக்காக எதையும் செய்யத் துணிந்தவள் அவள்... நான் வியக்கும் திறமைசாலி அவள்... நான் இரசித்த அழகியும் அவள்... அவளுக்கு நான் செய்துவிட்டேன்... ஒர் அநீதி... அவள் தவறேதும் செய்திராமல்... என் மேல், அவள் கொண்ட நம்பிக்கையினால் மட்டுமே... கண்கலங்கியிருக்கிறாள்... தலைக்குனிந்து நிற்கிறாள்... தண்டனை ஏந்தியிருக்கிறாள்... என்னைக் காத்துக்கொள்ள, அவளை பலி கொடுத்துவிட்டேனே... அதனால்... அவள் மனம் என்ன வேதனைப் பட்டிருக்கும்... என்னைக் காட்டிக்கொடுக்காமல்... யாரிடமும் எதையும் சொல்லாமல்... உண்மையெல்லாம் அவள் மனதிலேயே புதைத்து... என்னை நல்லவனாக்கி... அவள் கெட்டவளாகி... நெஞ்சி ஏந்தி நிற்கிறாளே என் தண்டனையை... நான் செய்தது துரோகம்... அவள் செய்தது தியாகம்... என்ன

Read More

உனக்காகக் காத்திருப்பேன்… – #கவிதை

இவ்வளவு நாள் ஏன் என் கனவில் வரவில்லை என... உன்னை கோபித்துக்கொள்வதா...? இல்லை... இப்போது ஏன் மீண்டும் என் கனவில் வந்தாய் என... உன்னை கோபித்துக்கொள்வதா...? வேண்டாம் என்று சொல்லிவிட்டாய் நீ... என்னை... தொந்தரவே செய்யவில்லை அதன் பின்னே நான்... உன்னை... ஏதோவொரு சக்தி சேர்த்துவைக்க நினைக்கிறதா...? நம்மை... என் எனக்கு இப்படியொரு... நிலைமை... உன்னை நினைத்தாலே என் மனம் ஏனோ... வலிக்கிறதே... உன்னை மீண்டும் மீண்டும் நினைக்க என் மனம் ஏனோ... துடிக்கிறதே... ஒதுங்கித்தானே இருந்தேன் இவ்வளவு நாள் உன்னைவிட்டு... ஏன் பேசினாயோ என்னிடம் உன் மெளனத்தை கலைத்திவிட்டு... இப்போது... மீண்டும் மெளனமாகிவிட்டாயே என்னை புலம்ப விட்டுவிட்டு... என்ன

Read More

அது தான் காதல் – #கவிதை

கெஞ்சினாலும் வராது... கொஞ்சினாலும் வராது... மிரட்டினாலும் வராது... மயக்கத்தினாலும் வராது... கத்தினாலும் வராது... கதறினாலும் வராது... பேசினாலும் வராது... பேசாவிடினும் வராது... பார்த்தாலும் வராது... பார்த்துக்கொண்டேயிருந்தாலும் வராது... பார்க்காவிட்டாலும் வராது... அது... வருவதும் தெரியாது... அது... வந்ததுக் கூட தெரியாது... அது... வருவதைத் தடுக்கவும் முடியாது... அது... வருவதைத் தவிர்க்கவும் முடியாது... அது... போவதையும் தடுக்க முடியாது... அது... போனால் போனது தான்... அதனைக் காக்கவும் முடியாது... அதனைக் காப்பாற்றவும் முடியாது... அது... சொல்லிவிட்டும் போகாது... அது... சொல்லிவிட்டும் வராது... அது தான் காதல்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… மார்ச் 07, 2020 காலை 09.48 மணி…

Read More

அழைத்துவிடாதே… உன் திருமணத்திற்கு… – #கவிதை

தினமும் கனவொன்று காண்கிறேன்... அந்தக் கனவிலே... என் கையில்... நமது செல்லப் பெண் குழந்தையிருக்கிறது... உன்னை மருத்துவமனையினுள் அழைத்துச் செல்கின்றனர்... இரண்டாவது பிரசவத்திற்கு... என் முகமெல்லாம் கவலை ரேகைகள்... சில நிமிடங்களில்... கையில் தவிழும் ஆண் குழந்தையுடன்... வருகிறாள் ஒரு செவிலியர்... நம் மகன்... உன்னைப் பார்க்க என்னை உள்ளே அனுமதிக்கிறார்கள்... நீ பிரசவம் முடிந்து உறங்கிக் கொண்டிருக்கிறாய்... என் கண்ணே... உன் உச்சந்தலையில் முத்தமொன்று தருகிறேன்... அந்த நொடியில்... விழித்துக்கொள்கிறேன்... நான்... தினமும் இதே இடத்தில்... தினம் தினம் இதே கனவு என்னை எழுப்பிவிட்டு விடுகிறது... ஆழ்ந்த உறக்கத்திலிருந்து... கனவுலகிலே... உன்னை என் பொண்டாட்டியாய் நினைத்து வாழ்ந்துவிட்டேன்... குடும்பமே நமக்கு இருக்கிறது

Read More