Saturday, March 7, 2026
Home > #காதல் (Page 17)

அவள் பார்த்த பார்வையில்…

என் ஆரூயிர் நண்பன் ரியாஸ், புதிய நாட்டுக்கோழிப் பண்ணை துவக்கினான். சேலம் சோனா காலேஜில் எம்.பி.ஏ படிக்கும் பொழுதே நாட்டுக்கோழி பண்ணை வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பான். பண்ணை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்திருந்தான்.  மேய்ச்சல் கோழிகளாய் வளர்க்க வேண்டி, கோழிப்பண்ணையை அதற்கு ஏற்றார் போல தயார் செய்து இருந்தனர். கோழிப்பண்ணை சேலத்திலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் இருந்தது. விருந்தெல்லாம் முடித்துவிட்டு, கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தேன். எனது முந்நாள் இந்நாள் எந்நாள் காதலி

Read More

என் மன்னவா… வாடா…

என் அன்பே... என் ஆயுளே... என் இணையே... என் ஈரமே... என் உயிரே... என் ஊடலே... என் எண்ணமே... என் ஏறுகொடியே... என் ஐம்புலனே... என் ஒளியே... என் ஓவியமே... என் காதலா... நீ உயிராய்... நான் மெய்யாய்... நாம் எப்போது ஈன்றொடுப்போம்... உயிர்மெய்யாய்... காத்திருக்கிறேன் உனக்காக... ஆருயிரே.. வாடா மன்னவா... என்னை வென்றெடுக்க... என் மன்னவா... வாடா.. - உ.கா. நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை... ஜூலை 04, 2019 காலை 11.45

Read More

நீ சொல்லப்போகும் பதிலில்…

உன் மேல் கொண்டுள்ள காதலை அறிய முடியவில்லை முதலில்... ஆனால்... எப்போதும் நீ நிறைந்திருக்கிறாய் என் நினைவில்... நீ கடைசிகாலம் வரை இருக்க வேண்டும் என் வாழ்வின் முடிவில்... கிரங்கிக் கிடக்கிறேன் நான் கண்ட உன் அக அழகில்... அழகே வெட்கப்பட்டது, உன் அழகைக்கண்டு நான் உன்னைப்பார்த்த நொடியில்... உன்னைப்பார்க்க நான் வருகிறேன் எகப்பட்ட தடங்கலில்... அதையெல்லாம் தாண்டி வருகையில் எதேதோ செய்கிறது என் உடலில்... இவையெல்லாம் என் மனம் செய்யும் சேட்டைகள் உன்னைப்பார்க்கும் ஆசையில்... காத்திருந்து உன்னைக் காண்பதில் எனக்குள் இருப்பது பரவசமெனில்... உன்னைக் நினைத்து உன்னைக்காண காத்திருக்கும் நாளிலெல்லாம் இருக்கிறது சொர்கம் அதில்... இனி, உன்

Read More

நினைவெல்லாம் அவள் தான்…

அவளை மறக்க போராடுகிறேன் இப்போதும்... அவளின் நினைவுகளால் தவிக்கிறேன் எப்போதும்... என் கனவெல்லாம் அவள் தான்... என் நினைவெல்லாம் அவள் தான்... என் சுகமும் அவள் தான்... என் துக்கமும் அவள் தான்... அவளின் சிரிப்புச்சத்தம்  கேட்டுக்கொண்டே இருக்கிறது... என் காதுகளில்... அவளின் கடைசி அழுகை வலித்துக்கொண்டே இருக்கிறது... என் மனதில்... அவள் என்னைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டாள்... என்னை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டாள்... ஆனால்... எப்போதும் அவள் என் உயிரிலே கலந்திருக்கிறாள்... அணு அணுவாய்... - உ.கா. மே 30, 2019 காலை 8.25 மணி

Read More

காதலைத்தவிர வேறொன்றுமில்லை…

நான் அவளைத் தேடிச்செல்ல எனக்கு தகுதியுமில்லை... என்னை அவள் மன்னிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்புமில்லை... அவள் என்மேல் கொண்டுள்ள கோபத்திலும்  தவறுமில்லை... அவளை மறக்க எவ்வளவு முயன்றாலும், அதில் எனக்கு  வெற்றியுமில்லை... என் கனவுகளிலும், என் நினைவுகளிலும் அவள் இல்லாமல் இருந்ததுமில்லை.. எங்கள் காதலின் ஆழத்தை நான் உணர்ந்ததுமில்லை... என் தவறுகளை நினைத்து, பொறுப்பேற்று நான் வருந்தாத நாளுமில்லை... என் தவறுகளுக்காக என்னை மன்னிக்க நான் தயாராகவுமில்லை... என் தவறுகளுக்காக என்னை நான் தண்டித்துக்கொள்ளாத நொடியுமில்லை... அவள் போய்விட்டாள், என்னைத் தாண்டி நெடுந்தூரம், இனி அவள் திரும்ப பாதையுமில்லை... அவள் திரும்பிவந்தாளும், இச்சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ள போவதுமில்லை... வலியால் துடிப்பதைத் தவிர எனக்கு

Read More