Sunday, June 7, 2026
Home > #காதல் (Page 7)

உனக்காகக் காத்திருப்பேன்… – #கவிதை

இவ்வளவு நாள் ஏன் என் கனவில் வரவில்லை என... உன்னை கோபித்துக்கொள்வதா...? இல்லை... இப்போது ஏன் மீண்டும் என் கனவில் வந்தாய் என... உன்னை கோபித்துக்கொள்வதா...? வேண்டாம் என்று சொல்லிவிட்டாய் நீ... என்னை... தொந்தரவே செய்யவில்லை அதன் பின்னே நான்... உன்னை... ஏதோவொரு சக்தி சேர்த்துவைக்க நினைக்கிறதா...? நம்மை... என் எனக்கு இப்படியொரு... நிலைமை... உன்னை நினைத்தாலே என் மனம் ஏனோ... வலிக்கிறதே... உன்னை மீண்டும் மீண்டும் நினைக்க என் மனம் ஏனோ... துடிக்கிறதே... ஒதுங்கித்தானே இருந்தேன் இவ்வளவு நாள் உன்னைவிட்டு... ஏன் பேசினாயோ என்னிடம் உன் மெளனத்தை கலைத்திவிட்டு... இப்போது... மீண்டும் மெளனமாகிவிட்டாயே என்னை புலம்ப விட்டுவிட்டு... என்ன

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 33

முப்பத்தி இரண்டாவது பகுதியின் லிங்க்... எதற்கு இத்தனை மிஸ்டு கால்கள் வந்திருக்கிறது, தாத்தாவுக்கு ஏதோனும் மருத்துவ உதவி தேவைப்பட்டிருக்குமோ? நான் குடித்துவிட்டு தூங்கியதால் ஏதோனும் விபரீதமாகியிருக்குமோ? என்று எனக்குள் பயமும் துக்கமும் ஒருசேர வந்தது. அப்படி ஏதேனும் ஆகியிருந்தால், என் வாழ்நாள் முழுவதும் அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியாதே. என் சிந்தனைகள் எங்கெங்கோ அலைப்பாய்ந்தன. என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்ன நடக்கப்போகிறது? என ஒன்றும் புரியாமல் சோபனாவைப் பார்த்தேன்.

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 32

முப்பத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்... சோபனா என்னுடன், என் அலுவலகத்தில் பணிப்புரியும் பெண். தமிழ்நாட்டில், திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்டவள். நானும் அவளும் ஒரே ப்ராஜெக்ட்டில் வேலை செய்கிறோம். அவள் புனேயில் டிரைனிங் முடித்து இந்த ப்ராஜெக்டிற்காக புதிதாக வந்திருக்கிறாள். நானும் சூசனும் தான் இவளை போனில் இண்டர்வியூ செய்தோம். அப்போது அவள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்று தெரியாது. இங்கே வந்த சில நாட்களில் நான் மட்டுமே தமிழ் தெரிந்தவள் என்பதால்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 31

முப்பதாவது பகுதியின் லிங்க்... ஒரு ஃபுல் பாட்டிலையும் காலி செய்துவிட்டேன். எத்தனை சிகரெட் புகைத்தேன் என்றே தெரியவில்லை. போதை தலைக்கு ஏறி, சோபாவிலேயே உறங்கிவிட்டேன். கடந்த இரண்டு மூன்று நாட்களாக இப்படித் தான் ஒரே குடியாகப் போய்க்கொண்டிருகிறது. நடந்த எல்லாவற்றை தாத்தாவிடம் எப்படிச் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே சோபனா ஏற்பாடு செய்துக் கொடுத்த ரூமிலேயே எவ்வளவு நாள் தான் அடைந்துக்கிடப்பது? எங்காவது வெளியில் சென்று வரலாம் என்று அவ்வப்போது தோன்றும். ஆனால்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 30

இருபத்திஒன்பதாவது பகுதியின் லிங்க்... மணி பத்தை நெருங்கையில் தாஸ் போன் அடித்தார், “சார். வந்துட்டேன்” என்றார். நான் அந்த டீக்கடையை அடையாளம் சொல்லி அங்கே வந்து என்னை அழைத்துக்கொள்ளுமாறு கேட்டுகொண்டேன். தாஸ் என்னை பிக்கப் செய்ய வரும் வரை இன்றைக்கு நான் செல்லும் இடங்களைப் பற்றி அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்குள் தாஸ் வந்துச் சேர்ந்தார். வந்தவர், ராமசாமி ஐயா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். ஐயாவும், தாஸின் குடும்பத்தைப் பற்றி நலம் விசாரித்தார். “நல்ல பையன் நம்ம

Read More