Saturday, March 7, 2026
Home > #கவிதை (Page 7)

காதல், நம் மனதிலாவது வாழட்டும்… – #கவிதை

பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையை பிடிக்கவேயில்லை என்று என்னிடம் சொல்கிறாய்... உன் குடும்பத்திற்காக அவனை மணமுடிக்க சம்மதித்துவிட்டாய்... என்னை மட்டும் ஏனோ அடிக்கடி நினைக்கிறாய்... என்னைப் பிடித்திருந்தும் பிடிக்கவில்லை என்கிறாய்... ஏனோ, என் மேல் கொள்ளைக் கோபத்தில் இருக்கிறாய்... தாமதமாக என் காதலை உன்னிடம் சொன்னேன் என்ற கோபமா? இல்லை... ஏன் காதலை உன்னிடம் சொன்னேன் என்ற கோபமா? காதல்... இப்போது காலம் கடந்துவிட்டது... வாய்ப்புகளின் நேரம் முடிந்துவிட்டது... நான் ஆகியிருக்க வேண்டும் உந்தன் கணவனாய்... நீ ஆகியிருக்க வேண்டும் எந்தன் மனைவியாய்... நாம் என்றும் சேர்ந்திருந்திருக்க வேண்டும் நல்லதொரு குடும்பமாய்... வாழ்க்கையையே கொண்டாடியிருப்போம் நாம்

Read More

என்ன தெரியும் எனக்கு… – #கவிதை

உன்னைப் பற்றி என்னத் தெரியும் எனக்கு... என்று நீ கேட்கிறாய்... உன் கேள்வியில் உண்மை உள்ளதடி என் கண்ணே... உன் பெயரைத் தவிர என்னத் தெரியும் எனக்கு? உன் பிறந்த நாளும் தெரியாது... நீ பிறந்த ஊரும் தெரியாது... உன் பெற்றவர் பெயரும் தெரியாது... உன்னுடம் பிறந்தவன் பெயரும் தெரியாது... உன் முகவரியும் எனக்குத் தெரியாது... நீ என்ன சாதி என்றும் தெரியாது... உன் வீடு சொந்த வீடா என்பதும் தெரியாது... உன் சொத்துபத்தும் எனக்குத் தெரியாது... உன் தாய்மொழி என்னவென்றும் தெரியாது... உன் குடும்பம் எப்படிப்பட்டது என்பதும்

Read More

ஏன் உன் மேல் இந்தக் காதல்… – #கவிதை

அன்று தான் முதன் முதலில் அந்த எண்ணம் தோன்றியது என் உள்ளத்தில் மின்னலைப் போல... என் மனமும் அந்த எண்ணத்தை சரியெனச் சொன்னது... அடுத்த சில தினங்களில் வந்தது... காதலர் தினம்... அன்றே சொல்லிவிட்டே உன்னிடம்... என் காதலை... உன் முடிவையும் சொல்லிவிட்டாய்... உன் மறுப்பையும் பதிவுசெய்துவிட்டாய்... என்னிடம்...   மூன்று வருடம் பழக்கம் நமக்கு... நான் தேடிச்சென்றவளும் என்னைக் கைவிட்டாள்... என்னை நாடி வந்தவளும் என்னை உதறிவிட்டாள்... இவை எல்லாம் தெரியும் தானே உனக்கு... அப்போதும் கூட நான் உன்னிடம் அறுதல் தேடவில்லையே... என் கண்ணே... உன்னுடன் எனக்குத் தனிமையில் கிடைக்காத நாட்களா? அதில்

Read More

அவளையே நினைத்து நினைத்து

காதலில் தோற்பது எனக்கு புதிதல்ல... என்னை வேண்டாம் என்று சொல்லாத பெண்ணல்ல... காதலியை மறப்பது எளிதல்ல... புதிய காதலையை தேடுவதும் கஷ்டமுமல்ல... காதல் அவிழ்க முடியாத புதிருமல்ல... பெண்களின் மனம் கல்லுமல்ல... காத்திருப்பதைத் தவிர வேறுவழியுமல்ல... பெண்ணின் பதிலுக்காக காத்திருப்பதைப் போன்ற சுகமுமல்ல...   அவளும் இன்னும் காத்திருந்தாள் திருமணத்திற்கு... இதுவரை மாப்பிள்ளையே கிடைக்கவில்லை அவளுக்கு... அவளை ஏனோ பிடித்திருந்தது என் உள்ளத்திற்கு... இன்னும் ஒரு நாளே இருந்தது காதலர் தினத்திற்கு... காதலை அன்றே சொல்லலாம் என்று தோன்றியது மனதிற்கு... எழுதினேன் ஒரு காதல் கடிதம் அவளுக்கு... வாங்கினேன் ஒரு சிவப்பு

Read More

விலகிச் செல்லும் பெண்ணை…

தட்டிக்கொடுப்பது ஆண்மையின் அழகு... விட்டுக்கொடுப்பது பெண்மையின் அழகு... கோபம் ஆண்மையின் அழகு... மெண்மை பெண்மையின் அழகு... சிரிப்போ ஆயுதம் ஆணுக்கு... அழுகையே ஆயுதம் பெண்ணுக்கு... காத்திருப்பது ஆணுக்கு அழகு... காக்க வைப்பது பெண்ணுக்கு அழகு... தேடிப்போவது ஆணின் அழகு... தேடிவர வைப்பது பெண்ணின் அழகு... கடமையை செய்வது ஆணுக்கு  அழகு... கடமையை உணரச்செய்வது பெண்ணிற்கு அழகு... ஆசையை அடக்க முடியாது ஆணால்... ஆசையை தூண்ட முடியும் பெண்ணால்... ஐந்து நிமிடமே இன்பம் ஆணுக்கு... அளவில்லாத இன்பம் பெண்ணிற்கு... ஒவ்வொரு பெண்ணிலும் தாயில் பாசத்தை தேடுது ஆண் மனம்... ஒவ்வொரு ஆணிலும் தந்தையின் அரவனைப்பை  தேடுது

Read More