Friday, May 3, 2024
Home > #காதல் (Page 4)

ஒண்ணுமில்ல… பகுதி 40

முப்பத்தி ஒன்பதாவது பகுதியின் லிங்க்... எங்கோ ஆரம்பித்த நினைப்பு, எங்கெங்கோ பயணிக்கிறதே என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ஒருவன் இன்ஸ்பெக்டர் அறையிலே வந்தமர்ந்தான். அவன் வந்தமர்ந்த தோரனையே எனக்கு காட்டிக்கொடுத்துவிட்டது இவன் தான் முக்கியமானவன் என்று. சில நிமிடங்களிலேயே என் பேத்தியும் அங்கே வந்தாள். அப்போது அங்கே நடந்ததை முழுமையாக உள் வாங்கிக் கொண்டேன். என் பேத்திக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. என் பேத்தியின் மேல் தவறில்லை என்று எனக்குப் புரிந்தது.

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 39

முப்பத்தி எட்டாவது பகுதியின் லிங்க்... இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த போதே, அந்தேரி போலிஸ் ஸ்டேசனுக்கு வந்து சேர்ந்திருந்தேன், அந்த இன்ஸ்பெக்டருடன். ஏதோ கொலைக் குற்றவாளியை அழைத்துக்கொண்டுப் போவதைப் போல் என்னை உள்ளே அழைத்துச் சென்றனர். யாரையோ திருப்திப் படுத்தவே இந்த இன்ஸ்பெக்டர் இவ்வாறெல்லாம் செய்கிறான் என்று எனக்கு இத்தனை வருட அனுபவத்தில் எளிதாகப் புரிந்தது. இந்த இன்ஸ்பெக்டருக்குப் பின்னால் இருக்கிறது யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு யாரிடம் உதவி கேட்கலாம் என்று

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 38

முப்பத்தி எழாவது பகுதியின் லிங்க்... அந்த இன்ஸ்பெக்டர் என்னருகில் வந்து, “சார், உங்களையும் விசாரிக்க வேண்டும். நீங்க இப்ப எங்கக் கூட ஸ்டேசன் வரைக்கும் வரனும்” என்றான். “உடை மாற்றிக்கொண்டு வரலாமா? இல்லை அப்படியே வர வேண்டுமா?” என்று நக்கலாகக் கேட்டேன். கடுப்புடன், “சரி. போய் மாத்திக்கிட்டு வாங்க” என்றான். நான் மீண்டும் மீண்டும் தேவிக்கு போன் அடித்தேன். அவள் போனை எடுக்கவில்லை. இவள் இந்த நேரத்தில் இப்படி போன் எடுக்காமல் இருக்கிறாளே என்று கொஞ்சம்

Read More

இனி நான் என்ன செய்வேன்…? – #கவிதை

தவறேன தெரிந்தும்... தவறு செய்தேன்... இழிவென தெரிந்தும்... துணிந்து செய்தேன்... மடமையென தெரிந்தும்... முடிவு செய்தேன்... உண்மையென தெரிந்தும்... ஊழல் செய்தேன்... என்னையும் பாதிக்கும் எனத் தெரிந்தும்... பாவம் செய்தேன்... என்னை நீ நம்புவது தெரிந்தும்.. நான் உனக்கு மோசம் செய்தேன்... உன் நற்குணம் தெரிந்தும்... உனக்கு நான் தீமை செய்தேன்... என் மாண்பு தெரிந்தும்... மானங்கெட்ட அந்தச் செயலைச் செய்தேன்... எல்லாம் தெரிந்தும்... இழிவு செய்தேன்... நான் கற்ற கல்விக்கு, இனி என்ன பயன்...? நான் பெற்ற அறிவிற்கு, இனி என்ன பயன்...? என் கீழ்தனமான புத்திக்கு, இனி என்ன பயன்...? தவறே செய்யாத உன்னை தண்டித்த என்

Read More

என்ன பதில்…? என்ன பதில்…? – #கவிதை

உனக்கு நான் இழைத்த கொடுமைக்கு... என்ன பதில்...? என்னால் நீ விடும் கண்ணீருக்கு... என்ன பதில்...? இன்னும் உண்மையை நெஞ்சிக்குள்ளேயே வைத்திருக்கும், உன் நற்குணத்திற்கு... என்ன பதில்...? என்னை எப்போதும் காட்டிக்கொடுத்திடாத, உன் நல்லுள்ளத்திற்கு... என்ன பதில்...? தவறே செய்யாத, உன்னை தண்டித்தேனே... அதற்கு என்ன பதில்...? நீ படும் மன வேதனைக்கு என்ன பதில்...? உறக்கமில்லாமல் தவிக்கும் உனக்கு என்ன பதில்...? என்னால் நீ இழந்த சுதந்திரத்திற்கு என்ன பதில்...? என் மேல் நீ வைத்த அதீத நம்பிக்கைக்கு என்ன பதில்...? என் மேல் நீ கொண்டிருக்கும் கோபத்திற்கு

Read More