Monday, April 29, 2024
Home > #கவிதை (Page 4)

இனி நான் என்ன செய்வேன்…? – #கவிதை

தவறேன தெரிந்தும்... தவறு செய்தேன்... இழிவென தெரிந்தும்... துணிந்து செய்தேன்... மடமையென தெரிந்தும்... முடிவு செய்தேன்... உண்மையென தெரிந்தும்... ஊழல் செய்தேன்... என்னையும் பாதிக்கும் எனத் தெரிந்தும்... பாவம் செய்தேன்... என்னை நீ நம்புவது தெரிந்தும்.. நான் உனக்கு மோசம் செய்தேன்... உன் நற்குணம் தெரிந்தும்... உனக்கு நான் தீமை செய்தேன்... என் மாண்பு தெரிந்தும்... மானங்கெட்ட அந்தச் செயலைச் செய்தேன்... எல்லாம் தெரிந்தும்... இழிவு செய்தேன்... நான் கற்ற கல்விக்கு, இனி என்ன பயன்...? நான் பெற்ற அறிவிற்கு, இனி என்ன பயன்...? என் கீழ்தனமான புத்திக்கு, இனி என்ன பயன்...? தவறே செய்யாத உன்னை தண்டித்த என்

Read More

என்ன பதில்…? என்ன பதில்…? – #கவிதை

உனக்கு நான் இழைத்த கொடுமைக்கு... என்ன பதில்...? என்னால் நீ விடும் கண்ணீருக்கு... என்ன பதில்...? இன்னும் உண்மையை நெஞ்சிக்குள்ளேயே வைத்திருக்கும், உன் நற்குணத்திற்கு... என்ன பதில்...? என்னை எப்போதும் காட்டிக்கொடுத்திடாத, உன் நல்லுள்ளத்திற்கு... என்ன பதில்...? தவறே செய்யாத, உன்னை தண்டித்தேனே... அதற்கு என்ன பதில்...? நீ படும் மன வேதனைக்கு என்ன பதில்...? உறக்கமில்லாமல் தவிக்கும் உனக்கு என்ன பதில்...? என்னால் நீ இழந்த சுதந்திரத்திற்கு என்ன பதில்...? என் மேல் நீ வைத்த அதீத நம்பிக்கைக்கு என்ன பதில்...? என் மேல் நீ கொண்டிருக்கும் கோபத்திற்கு

Read More

எனக்கு தண்டனைக்கொடு பெண்ணே… – #கவிதை

அவளுக்கு... நான் செய்தது மடத்தனத்தின் உச்சம்... அவளுக்கு... இதற்கு மேல் அநீதியிழைக்க என்ன இருக்கிறது மிச்சம்... எனக்கு அவள் உண்மையாய் இருந்ததற்கு பரிசாய் அவளுக்கு அளித்தேன்... அவள் வாழ்வின் மீதான அச்சம்.... தவறிற்கு மேல் தவறு செய்துக்கொண்டிருக்கிறேன் எக்கச்சக்கம்.... சக மனுசியை அவமதித்த எனக்கு, இனி மனிதனாய் வாழத்தகுதியேயில்லை... ஆண் என சொல்லிக்கொள்வதில், இனி எனக்கு பெருமையில்லை... தவறிழைக்காத பெண்ணின் கண்ணீரின் முன்னால், இனி நான் உயிர் வாழத்தகுதியேயில்லை... அந்தப் பெண்ணிற்கு நான் இழைத்த அநீதியால், அவளிடம் மன்னிப்புக் கேட்பதற்கே எனக்கு உரிமையில்லை... அவள் என்னைத் தூற்றினாலும் தவறில்லை... அவள் என்னைக் கூண்டில்

Read More

மன்னித்துவிடு… இல்லையேல் தண்டித்துவிடு… – #கவிதை

ஒரு ஆண் செய்யும் பெரும்பாவம், ஒரு பெண்ணின் கண்களில் கண்ணீர் சிந்த வைப்பது... அந்தப் படுபாவத்தை நான் செய்துவிட்டேன்... என் மனசாட்சி என்னை மன்னிக்கவில்லை... அவள்... எந்தத் தவறும் செய்யவில்லை... என் மீது குற்றமிருந்தும், எந்தக் குற்றமும் சுமத்தவில்லை... நான் செய்த தவறைப் பற்றி, அவள் யாரிடமும் மூச்சே விடவில்லை... அதற்காகவே தான் நான் அவளை தண்டித்தேனா? என் வார்த்தைகள், அவள் நெஞ்சை எவ்வளவுக் காயப்படுத்தியிருக்கும்... என் கோபம், அவளை எவ்வளவு வாட்டியிருக்கும்... எனது அவசர முடிவு, அவளை எவ்வளவு வருத்தியிருக்கும்... தவறேதும் செய்திராத ஒரு பெண்ணை

Read More

தியாகத்திற்கு… துரோகம் செய்தேன்… – #கவிதை

நல்ல உள்ளம் கொண்டவள் அவள்... எனக்காக எதையும் செய்யத் துணிந்தவள் அவள்... நான் வியக்கும் திறமைசாலி அவள்... நான் இரசித்த அழகியும் அவள்... அவளுக்கு நான் செய்துவிட்டேன்... ஒர் அநீதி... அவள் தவறேதும் செய்திராமல்... என் மேல், அவள் கொண்ட நம்பிக்கையினால் மட்டுமே... கண்கலங்கியிருக்கிறாள்... தலைக்குனிந்து நிற்கிறாள்... தண்டனை ஏந்தியிருக்கிறாள்... என்னைக் காத்துக்கொள்ள, அவளை பலி கொடுத்துவிட்டேனே... அதனால்... அவள் மனம் என்ன வேதனைப் பட்டிருக்கும்... என்னைக் காட்டிக்கொடுக்காமல்... யாரிடமும் எதையும் சொல்லாமல்... உண்மையெல்லாம் அவள் மனதிலேயே புதைத்து... என்னை நல்லவனாக்கி... அவள் கெட்டவளாகி... நெஞ்சி ஏந்தி நிற்கிறாளே என் தண்டனையை... நான் செய்தது துரோகம்... அவள் செய்தது தியாகம்... என்ன

Read More