Sunday, June 7, 2026
Home > #காதல் (Page 13)

காதல், நம் மனதிலாவது வாழட்டும்… – #கவிதை

பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையை பிடிக்கவேயில்லை என்று என்னிடம் சொல்கிறாய்... உன் குடும்பத்திற்காக அவனை மணமுடிக்க சம்மதித்துவிட்டாய்... என்னை மட்டும் ஏனோ அடிக்கடி நினைக்கிறாய்... என்னைப் பிடித்திருந்தும் பிடிக்கவில்லை என்கிறாய்... ஏனோ, என் மேல் கொள்ளைக் கோபத்தில் இருக்கிறாய்... தாமதமாக என் காதலை உன்னிடம் சொன்னேன் என்ற கோபமா? இல்லை... ஏன் காதலை உன்னிடம் சொன்னேன் என்ற கோபமா? காதல்... இப்போது காலம் கடந்துவிட்டது... வாய்ப்புகளின் நேரம் முடிந்துவிட்டது... நான் ஆகியிருக்க வேண்டும் உந்தன் கணவனாய்... நீ ஆகியிருக்க வேண்டும் எந்தன் மனைவியாய்... நாம் என்றும் சேர்ந்திருந்திருக்க வேண்டும் நல்லதொரு குடும்பமாய்... வாழ்க்கையையே கொண்டாடியிருப்போம் நாம்

Read More

என்ன தெரியும் எனக்கு… – #கவிதை

உன்னைப் பற்றி என்னத் தெரியும் எனக்கு... என்று நீ கேட்கிறாய்... உன் கேள்வியில் உண்மை உள்ளதடி என் கண்ணே... உன் பெயரைத் தவிர என்னத் தெரியும் எனக்கு? உன் பிறந்த நாளும் தெரியாது... நீ பிறந்த ஊரும் தெரியாது... உன் பெற்றவர் பெயரும் தெரியாது... உன்னுடம் பிறந்தவன் பெயரும் தெரியாது... உன் முகவரியும் எனக்குத் தெரியாது... நீ என்ன சாதி என்றும் தெரியாது... உன் வீடு சொந்த வீடா என்பதும் தெரியாது... உன் சொத்துபத்தும் எனக்குத் தெரியாது... உன் தாய்மொழி என்னவென்றும் தெரியாது... உன் குடும்பம் எப்படிப்பட்டது என்பதும்

Read More

ஏன் உன் மேல் இந்தக் காதல்… – #கவிதை

அன்று தான் முதன் முதலில் அந்த எண்ணம் தோன்றியது என் உள்ளத்தில் மின்னலைப் போல... என் மனமும் அந்த எண்ணத்தை சரியெனச் சொன்னது... அடுத்த சில தினங்களில் வந்தது... காதலர் தினம்... அன்றே சொல்லிவிட்டே உன்னிடம்... என் காதலை... உன் முடிவையும் சொல்லிவிட்டாய்... உன் மறுப்பையும் பதிவுசெய்துவிட்டாய்... என்னிடம்...   மூன்று வருடம் பழக்கம் நமக்கு... நான் தேடிச்சென்றவளும் என்னைக் கைவிட்டாள்... என்னை நாடி வந்தவளும் என்னை உதறிவிட்டாள்... இவை எல்லாம் தெரியும் தானே உனக்கு... அப்போதும் கூட நான் உன்னிடம் அறுதல் தேடவில்லையே... என் கண்ணே... உன்னுடன் எனக்குத் தனிமையில் கிடைக்காத நாட்களா? அதில்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 10

ஒன்பதாவது பகுதியின் லிங்க்... மீண்டும் ஒரு ரயில் நிலையத்தில் இரயில் நின்றது. நான் அவளைப் பார்க்கிறேனா என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு அந்த ரயில் நிலையத்திலே அவள் இறங்கினாள். நானும் அங்கேயே இறங்கிவிடலாம் என்று யோசித்து முடிப்பதற்குள் இரயில் கிளம்பியது. நானும் அவளையே பார்த்துக்கொண்டிந்தேன். இரயிலை விட்டு கீழே இறங்கிய பின், கூட்டத்தில் வந்ததால் களைந்திருந்த தன் உடையை சரி செய்துக் கொண்டாள். நான் அவளைப் பார்க்கிறேனா என்று மீண்டும் ஒரு முறை என்னைத்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 09

எட்டாவது பகுதியின் லிங்க்... இனி மும்பையை சுற்றிப் பார்க்க கிளம்ப வேண்டியது தான் என்ற சந்தோஷத்தில் அவசர அவசரமாக ஓட்டலுக்கு வந்து, உடை மாற்றிக் கொண்டு, ஓட்டல் பஃபேவில் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன். கிளம்பும் முன் மணியைப் பார்த்தேன், மணி 8.00 என்று காட்டியது. “முதலில் லோக்கல் டிரைன்ல போயி பழகிக்கோங்க. அப்ப தான் மும்பை உங்களுக்கு ஈஸியா இருக்கும்”  என்று அந்த பெரியவர் ராமசாமி சொன்னது நினைவிற்கு வந்தது. நேராக மலாட் கிழக்கு புறநகர் ரயில்

Read More