Sunday, June 7, 2026
Home > #காதல் (Page 11)

ஒண்ணுமில்ல… பகுதி 15

பதினான்காவது பகுதியின் லிங்க்... யாரோ என்னையே பார்ப்பது போன்ற உணர்வு, எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதைப் போல எனக்குள்ளும் ஏற்பட்டது. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு வயது எப்படியும் 30ற்குள் தான் இருக்கும். பார்க்க ஒல்லியாகவுமில்லை, குண்டாகவுமில்லை. கொஞ்ச வாட்ட சாட்டமான ஆளாகத் தெரிந்தான். கொஞ்சம் அழகாகவும் இருந்தான். அவன் முகத்தில் இருந்த சிரிப்பு என்னைக் கவர்ந்தது. ஆனால் நான் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இவன் உள்ளூர் ஆள் மாதிரி தெரியவில்லை.

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 14

பதிமூன்றாவது பகுதியின் லிங்க்... நான் உள்ளே சென்றதும் ஒரு ரயில் பிளாட்பாரத்திலிருந்து கிளம்பியது. வேகமாக ஓடிச்சென்று ஏறினேன். நான் ராபினை பிரிந்த பின் பெரும்பாலும் பெண்கள் பெட்டியில் தான் பயணிப்பேன். பொதுப் பெட்டியில் பயணித்தால், அவனுடன் பழகிய நாட்கள் என் நினைவிற்கு வந்து என்னை காயப்படுத்துகிறது. ஆனால் இன்று வேறு வழியில்லாமல் ஏற வேண்டியதாகிப் போனது. ஏற்கனவே நேரமாகிவிட்டதால், இதில் ஏறிக்கொண்டேன். வீட்டில் இருந்தே வேலை செய்திருக்கலாம். என் ஐடி நிறுவனத்தில் அந்த

Read More

அழைத்துவிடாதே… உன் திருமணத்திற்கு… – #கவிதை

தினமும் கனவொன்று காண்கிறேன்... அந்தக் கனவிலே... என் கையில்... நமது செல்லப் பெண் குழந்தையிருக்கிறது... உன்னை மருத்துவமனையினுள் அழைத்துச் செல்கின்றனர்... இரண்டாவது பிரசவத்திற்கு... என் முகமெல்லாம் கவலை ரேகைகள்... சில நிமிடங்களில்... கையில் தவிழும் ஆண் குழந்தையுடன்... வருகிறாள் ஒரு செவிலியர்... நம் மகன்... உன்னைப் பார்க்க என்னை உள்ளே அனுமதிக்கிறார்கள்... நீ பிரசவம் முடிந்து உறங்கிக் கொண்டிருக்கிறாய்... என் கண்ணே... உன் உச்சந்தலையில் முத்தமொன்று தருகிறேன்... அந்த நொடியில்... விழித்துக்கொள்கிறேன்... நான்... தினமும் இதே இடத்தில்... தினம் தினம் இதே கனவு என்னை எழுப்பிவிட்டு விடுகிறது... ஆழ்ந்த உறக்கத்திலிருந்து... கனவுலகிலே... உன்னை என் பொண்டாட்டியாய் நினைத்து வாழ்ந்துவிட்டேன்... குடும்பமே நமக்கு இருக்கிறது

Read More

புன்னகையே உனதழகு… – #கவிதை

இதுவரை நான் உன்னை இவ்வளவு அமைதியாய் பார்த்ததில்லை... அது நன்றாகவுமில்லை... நீ இப்படி இருப்பது எனக்கு பிடிக்கவுமில்லை... ஏன் எதையோ பறிகொடுத்ததைப் போலவே இருக்கிறாய்... ஏன் எதையோ தொலைத்ததைப் போலவே நடந்துக்கொள்கிறாய்... உன் மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கையில்... தவறாய்... மாபெரும் தவறாய்... சொல்லித் தொலைத்துவிட்டேன... என் காதலை... உன்னிடம்... அதனால் வந்த கோபம் உன் முகத்திற்கு அழகுதான்... ஆனால்... உன் புன்னகையே உன் உள்ளத்திற்கு அழகு... சில நாட்களாய்... தீவிரமாய் தேடிக்கொண்டிருக்கிறேன்... உன்னையே உன்னிடம்... உன் முகத்தில் கவலை ரேகையே எனக்குத் தெரிகிறது...   என்னை நீ வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே... ஆனால்... நீயோ காதலில் தோற்றவள்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 13

பன்னிரெண்டாவது பகுதியின் லிங்க்... எனது அப்பாவும் அம்மாவும் இப்போது சில நேரங்களில் ஒரு விசயத்திற்காக ஒன்று கூடுகிறார்கள். ஆனால் அது அவர்களது அன்பு மகளுக்காக அல்ல. அவர்கள் ஒன்று கூடுவது எதற்காக என்றால் அது ஒரு சொத்திற்காக. அந்த சொத்து டி.என்.நகர் என்று அழைக்கப்படும் தாதாபாய் நோவ்ரோஜி நகரில் இருக்கிறது. அக்காலத்தில் தாத்தா பெயரில் வாங்கியது. தாத்தாவின் அப்பா ஊரிலிருந்த மிச்ச சொச்ச சொத்தை விற்றுக் கொஞ்சம் பணம் கொண்டு வந்திருந்தார். தாத்தாவிற்கும்

Read More