Friday, April 26, 2024
Home > #காதல்_தோல்வி (Page 2)

காதலில்லாமல் உலகமேயில்லை… – #கவிதை

ஒன்று சேர வேண்டி மட்டுமே வருவதல்லவே காதல்... பிரிந்தே போனாலும் தோற்காதே இந்தக் காதல்... எவ்வளவு சண்டைகள் வந்தாலும் மறக்கடிக்கும் இந்தக் காதல்... முறிந்தே போனாலும், நினைத்து நினைத்து புன்னகைக்க வைக்குமே காதல்... சேர்ந்திருந்தால், உலகே நம் காலடியில் என நினைக்கத் தூண்டுமே இந்தக் காதல்... சேராதிருப்பின்னும், அது நன்மைக்கே என புரியவைக்கும் நல்ல காதல்... கேள்விக்குள்ளான வாழ்விலும் கூட ஒளிவீசுமே காதல்... தோற்றால், உலகையே இருட்டாகும் இந்தக் காதல்... மரணத்தின் நுழைவுவாயிலை கூட, முத்தமிட துணியவைக்கும் இந்தக் காதல்... ஏனென்று தெரியாமலே, வரும் இந்தக் காதல்... யாரிடமும் சொல்லாமலேயே போய்விடுமே இந்தக் காதல்... மீண்டும் மீண்டும் யார் மேலாவது பிறக்குமே இந்தக்

Read More

வாழ்நாள் காதலாய்… – #கவிதை

இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டாய்... என்னை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாய்... உன் மேல் சத்தியம் செய்துவிட்டேன்... உன்னிடம் வாக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டேன்... இல்லாதிருந்தால்... நீ போன இடத்திற்கே... உன்னுடனே வந்திருப்பேன்... உன் முகத்தை மறக்கவே நினைக்கிறேன்... ஒவ்வொரு நாளும்... ஆனால்... உன் நினைவில்லாமல் கழிய மறுக்கிறது... ஒவ்வொரு நொடியும்...   உன்னை நினைக்காத நாளில்லை... நீயில்லாமல் நான் நானாகயில்லை... அன்று உன் உடலிலே உயிரில்லை... எனக்கு அன்று முதல், ஏனோ நிம்மதியில்லை... நீயில்லாத உலகில் வாழ என்னால் ஏனோ முடியவில்லை... நீ மறைந்தபின்னே எதிலும் ஏனோ எனக்கு நாட்டமில்லை... மரணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்காத நாளுமில்லை... ஆனால்... கடவுளுக்கு அதனைக் கொடுக்க ஏனோ மனமில்லை... இப்பிரிவை ஏற்றுக்கொள்ள ஏனோ எனக்கு சக்தியில்லை... உன்னைப் பிரிந்த எனக்கு

Read More

ஜாதிகளால் ஜோதியானது… நம் காதலும்… -#கவிதை

நம் காதலுக்கு எமனாய் வந்தது ஜாதி... வெல்ல முடியவில்லை, நாம் அதனுடம் மோதி... ஜாதியை இங்கே ஆக்கிவிட்டார்கள், காதலுக்கான தகுதி... வென்று கரம்பிடிக்க எண்ணினேன் மதியால்... துவளாமல் போராடியும் துவண்டுக்கிடக்கிறேன் விதியால்... இருமனம் திருமணத்தில் சேர, எவனெவனோ தரவேண்டியிருக்கிறது அனுமதி... நம்மைப் பிரித்தால் ஏன் அவனுக்கு கிடைக்கிறது வெகுமதி... உலகிற்குச் சொல்கிறார்கள், நம் பிரிவை வைத்து, ஒரு சேதி... சமூகம் ஏனோ கடைப்பிடிக்கிறது, அநீதியைக்கண்டும், அமைதி... நம் காதலும் கரைந்துப்போனது... நம் மனமும் நிம்மதியிழந்துப்போனது... இந்த ஜாதிகளால்... ஜோதியானது... நம் காதலும்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… மே

Read More

நீக்க மற நிறைந்திருக்கிறாய்… – #கவிதை

நீ இல்லாத நாட்களை, நான் கடக்கப்போகும் வழி தெரியவில்லை... நீ தந்துவிட்டுச் சென்ற வலி, என் உயிருள்ள வரை மறையப்போவதுமில்லை... நீ எனக்குமில்லை... நான் உனக்குமில்லை... இனி நமக்கு எதிர்காலமேயில்லை... உன் நினைவுகளை என்னுள் சுமக்கிறேன் கருவாக... அது வளர்ந்து என் இதயத்தின்னுள்ளே இருக்கட்டும் வடுவாக... உலகமே ஊரடங்கால் நின்றிருக்க... என் மனமோ உன் நினைவுகளிலேயே, சுற்றிச் சுற்றி வந்திருக்க... யாருக்கும் அடங்காமல்... எதனையும் ஏற்க மனமில்லாமல்... பிரிவு கொடுத்த வலியை தாங்க முடியாமல்... கலங்கிப்போய் நிற்கிறேன்... மீளாத்துயரில் தவிக்கிறேன்... எல்லோரையும் தவிர்க்கிறேன்... மாற்றங்களைத் தேடித் தேடி அலைகிறேன்... வெறுமையாய்... வெற்றியில்லாமல்.... ஆனால்... நீ மட்டும் இன்னும்... நீக்க மற நிறைந்திருக்கிறாய்... என் மனதிலே... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என்

Read More

இனி நான் என்ன செய்வேன்…? – #கவிதை

தவறேன தெரிந்தும்... தவறு செய்தேன்... இழிவென தெரிந்தும்... துணிந்து செய்தேன்... மடமையென தெரிந்தும்... முடிவு செய்தேன்... உண்மையென தெரிந்தும்... ஊழல் செய்தேன்... என்னையும் பாதிக்கும் எனத் தெரிந்தும்... பாவம் செய்தேன்... என்னை நீ நம்புவது தெரிந்தும்.. நான் உனக்கு மோசம் செய்தேன்... உன் நற்குணம் தெரிந்தும்... உனக்கு நான் தீமை செய்தேன்... என் மாண்பு தெரிந்தும்... மானங்கெட்ட அந்தச் செயலைச் செய்தேன்... எல்லாம் தெரிந்தும்... இழிவு செய்தேன்... நான் கற்ற கல்விக்கு, இனி என்ன பயன்...? நான் பெற்ற அறிவிற்கு, இனி என்ன பயன்...? என் கீழ்தனமான புத்திக்கு, இனி என்ன பயன்...? தவறே செய்யாத உன்னை தண்டித்த என்

Read More