Saturday, April 27, 2024
Home > பெண் (Page 2)

இன்று அவளுக்குப் பிறந்தநாள்…

”நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் அப்டினா என்ன மாமா? கெட்ட தொடுதல் அப்டினா கற்பழிக்கிறதா மாமா?” என்று என் அக்கா மகள் என்னிடம் கேட்டாள். என் அக்கா மகள், தேவிகாவின் மூன்றாவது பிறந்தநாள் விழாவிற்குக்காக நெருங்கிய நலம் விரும்பிகளை மாமா அழைத்திருந்தார். அப்போது பலர் வருவார்கள் என்பதால், என் அக்கா அவளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு அருகிலேயே நான் தோரணம் கட்டிக்கொண்டிருந்தேன். விருந்தினர் வருவதற்குள் அக்கா அவளுக்குச்

Read More

கண்ணம்மா… போயிட்டியே என்னிடம் சொல்லாமல்…

நெடுநாட்களாக மனதை வருடிக்கொண்டிருந்த ஒரு அநீதியைப் பற்றியே இக்கட்டுரை. இந்த அநீதி நிகழும் பொழுது, என்னால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அதனை நினைத்து நினைத்து, என் தலையனையில், பல நாட்கள் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த அந்த சம்பவம் இதோ, ஒரு நாள் என் பெரியப்பா, மிகவும் பதற்றமாக என் தந்தையைக் காண வந்திருந்தார். அவர் வீட்டில் இல்லாததால், என்னிடம் சிறிது நேரம் நாட்டு நடப்புகளைப் பேசிவிட்டுச் சென்றார். மாலையில் வந்த

Read More

சபரிமலையும் பெண்களும்

“மாதவிடாய் காலங்களில் எங்களது நாப்கினை பயன்படுத்தினால், நீளம் தாண்டலாம், உயரம் தாண்டலாம், நேடுந்தூரம் ஓடலாம், ஆடிப்பாடி விளையாடலாம் என்று விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள்.... சுத்தமான எங்கள் நாப்கினை பயன்படுத்தினால், கோவில்களில் விளக்கேற்றலாம்... திருமணங்களுக்குச் செல்லலாம்... பிற மங்கல காரியங்களில் ஈடுபடலாம்... பிறர் வீட்டிற்கு சுக, துக்கங்களுக்குச் செல்லலாம்... என்று விளம்பரம் தருவார்களா?” என்று ஒரு பெண் கவிஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வினா எழுப்பியிருந்தார். ஆழமான கேள்வி, இந்தக்கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்களை நாம் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. அதில்

Read More

ஸ்பெஷல் காதல்…

ஸ்பெஷல் காதல்... மாற்று மாப்பிள்ளை... குருடர்களை பற்றிய ஒரு கதை இருக்கிறது. நான்கு குருடர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள், ஒரு நாள் குளத்திற்கு குளிக்கச் செல்லும் வழியில் ஒரு யானையும், யானைப் பாகனும் எதிரே வருகிறார்கள். குருடர்கள் நால்வரும் யானைக்கு மிக அருகில் வந்த பொழுது, யானை வருகிறது சற்று தள்ளி போகுமாறு பாகன் அவர்களை அதட்டுகிறான். இதுவரை யானைகளைப் பற்றிய கதைகளை காதால் மட்டுமே கேட்ட குருடர்கள், யானை எப்படி இருக்கும்

Read More

அருவியின் சாரல்…

அருவியின் சாரல்... 2017ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்படங்கள் எவை? என்று பட்டியலிட்டால் நிச்சயம் அருவி திரைப்படமும் அதில் இடம்பெறும். படத்தின் கரு, அருவியாக நடித்த அதிதி பாலன், திரைக்கதை, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மனிதம் அடிப்பட்டு போவது பற்றிய காட்சிகள், குழந்தைப் பருவத்தின் அழகியலை காட்டிய விதம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு என பாராட்ட நிறைய அம்சங்கள் இருக்கின்றன. அருவி திரைப்படத்தைப் பற்றி ஏராளமான விமர்சனங்களும், பாராட்டுக்களும் வந்துவிட்டது. ஆகவே, படத்தில் என்னை கவர்ந்த

Read More