Friday, March 29, 2024
Home > திருமணம்

அவன் கண்களில் நான்…

கடும் கோபத்துடன் இருந்த தயாவை ரியாஸும், பானுவும் சமாதனப் படுத்திக்கொண்டிருந்தனர். எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டுமென ஏன் இவர்கள் இருவரும் இப்படி போராடுகிறார்கள் என எனக்கு புரியவில்லை. என்னைப் பார்க்க வருவதை தயாவிடன் சொல்லாமல், அவனை அழைத்து வந்தது தான் பிரச்சனை என்று புரிந்தது. ஆனால், அதற்கு என் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று எனக்கு தெரியவில்லை. அப்போது தான் முதன் முதலில் அவன் கண்ணைப் பார்த்தேன். அதிலே ஒரு

Read More

அவள் பார்த்த பார்வையில்…

என் ஆரூயிர் நண்பன் ரியாஸ், புதிய நாட்டுக்கோழிப் பண்ணை துவக்கினான். சேலம் சோனா காலேஜில் எம்.பி.ஏ படிக்கும் பொழுதே நாட்டுக்கோழி பண்ணை வைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பான். பண்ணை திறப்பு விழாவிற்கு என்னை அழைத்திருந்தான்.  மேய்ச்சல் கோழிகளாய் வளர்க்க வேண்டி, கோழிப்பண்ணையை அதற்கு ஏற்றார் போல தயார் செய்து இருந்தனர். கோழிப்பண்ணை சேலத்திலிருந்து ஆத்தூர் செல்லும் வழியில் இருந்தது. விருந்தெல்லாம் முடித்துவிட்டு, கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தேன். எனது முந்நாள் இந்நாள் எந்நாள் காதலி

Read More

பெண்ணே! உன் நினைவுகளுக்கு நன்றி!!!

என் தோழியின் திருமணத்திற்காக திருச்சிக்கு சென்றிருந்தேன். கல்லூரியில் அவள் என் வகுப்புத் தோழி. இரவு விருந்து முடிந்ததும், என் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தமையால், எங்களுக்கு பேசுவதற்கு நிறைய இருந்தது. வேலை, காதல், மோதல், கிசு கிசு, கல்யாணம் என பல தலைப்புகளில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, எங்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த தோழி, குமுதாவிற்கு, அவளின் வருங்கால கணவரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு

Read More