Saturday, April 20, 2024
Home > #கவிதை

தீராக் காதல் – #கவிதை

ஏழு வருட காதலையும் துச்சமென தூக்கி எறிந்தாள் அவள் தம் பெற்றோர் சம்மதம் பெறமுடியாமல்... அகமகிழ்ந்த காதலையும் வேண்டவே வேண்டாம் என்றாள் அவள் தன் மனதை கல்லாக்கி... அவள் முடிவு இதுதான் எனில் எழுவருடமாய் அவள் தன் காதலை அள்ளித்தந்தது ஏனோ...? என்னுடன் சேர வழியேயில்லாமல் என்னை காதலித்து என்னுடன் சேர அவள் நினைத்தது என் தவறா...? என் இன்பத்திலும் துன்பத்திலும் அவள் பங்கெடுத்தது என்னை அவள் மீளத்துயரில் தவிக்கவிடத்தானோ...? துன்பமென்னும் தெரிந்தும் அவள் என்னைப் பிரிந்தாள் அது ஏனோ...? அவளை மறக்க நினைக்காத நாளில்லை... முயன்று... முயன்று... முடியாமல்... அவளை

Read More

மின்னலே அடித்தது என்மேலே – #கவிதை

பலமுறை அவளை பார்த்திருக்கிறேன்.... சிலமுறை அவளிடம் பேச முயன்றிருக்கிறேன்... அவளை நான் பார்க்காத நாளில்லை.... அவளை பார்ப்பதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை... அவளருகில் செல்ல மனத்தில் வீரமில்லை... அவள் என்னருகில் வரும் வேளையில், என் இதய துடிப்பிற்கு அளவேயில்லை... ஏனோ... சில நாட்களாக அவள் வரவில்லை... எங்கு தேடியும் என் கண்களில் அவள் படவில்லை... அவளை காணாத துயரிலிருந்து நாள் மீளவில்லை... நானாக சிரித்தேன், ஏன்னென்று தெரியவில்லை... துன்புற்றேன், எதற்கென்று புரியவில்லை... ஆனால்... அவள் பேரும் தெரியாது... அவள் ஊரும் தெரியாது... இருந்தும்... அவளை காணும் போது ஏதும் தோன்றியதில்லை... அவளை காணாததில், அவளை

Read More

மறுமணம்… திருமணம்… புதுமணம்… – #கவிதை

ஆயிரம் முறை பார்த்திருப்பேன் அவளின் புகைப்படத்தை... அன்று முதன்முதலில் பார்த்தேன் நேரில் அவள் தேவதை... மறுமணம் வேண்டாம் என்றிருந்தேன் அதுவரை... திருமணம் அவளுடன் தான் என்று எழுதினேன் முடிவுரை... பேச துடித்தேன் அவளிடம்... பேசியதும் அவளிடம் அடைந்தேன் புகழிடம்... நிச்சயக்கப்பட்ட திருமணம்... காதல் திருமணமாய் ஆனது... என் மனம் திறந்து... இந்த உலகம் மறந்து... சுற்றம் எல்லாம் துறந்து... அவள் மேல் பிறந்தது பித்து... எனக்கு அவளொரு முத்து... என் வலிகளெல்லாம் அழித்து... புது வாழ்க்கை கொடுத்தாள் அமைத்து... எனக்குள் அவள் அன்பை விதைத்து... எல்லையில்லாமல் காதலித்து... இன்பத்தை அணிவகுத்து... துன்பத்தை கருவறுத்து... என்னையே மறகடித்து... மறுமணமான திருமணத்தை... ஆக்கினாள் அவள்... புதுமணமாய்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும்

Read More

எல்லாம் உன் நினைவாக – #கவிதை

பெண்ணே... உன் முடிவுகளை கேள்வி எழுப்பும் அதிகாரம் எனக்கில்லை... அதை தெரிந்துக்கொண்டிருக்க அப்போது எனக்கு புத்தியில்லை... அது கொடுத்த, கசப்புகளால், நீ என்னை விட்டு போகாத தூரமில்லை... இப்போது பழையதெல்லாம் பேசி ஒரு பயணுமில்லை...   உன் வாழ்க்கைப் புத்தகத்தில் நான் ஒரு பக்கம் தான்... என் நினைவுகள் உனக்கு தருவதெல்லாம் வெறும் துக்கம் தான்... என்னைப் பிரிந்ததே உனக்கு வெற்றிகரமான ஒரு துவக்கம் தான்... என்னால் இனி உன் வாழ்வில் இல்லவேயில்லை முடக்கம் தான்... உன் நினைவுகள் எழுப்பும் அலையோசையில் எனக்கில்லை உறக்கம் தான்... என்னை மூழ்கடிக்கும் அந்த நினைவுகள் தரும் வலியெல்லாம் வெறும் தொடக்கம் தான்...   என்னுள், இன்னும் நீ

Read More

வலிதீர வழியுண்டோ… – #கவிதை

காற்றில்லாமல் புயல் வருவதுண்டோ... மேகங்கள் இல்லாத மழையுண்டோ... இருளில்லாத இடத்தில் ஒளி தேவையுண்டோ... பறவைகளில்லாத வனமுண்டோ... மீன்களில்லாத கடலுண்டோ... இலையில்லாத மரமுண்டோ... அனுயில்லாத உயிருண்டோ... கனவில்லாத உறக்கமுண்டோ... கண்ணீரில்லாத அழுகையுண்டோ... வார்த்தைகளில்லாத கோபமுண்டோ...   ஆண்மையில்லாத பெண்மையுண்டோ... பெண்மையில்லாத ஆண்மையுண்டோ... காதலில்லாத பெண் மனமுண்டோ... வலியினை மறைக்காத ஆண் மனமுண்டோ... காமமில்லாத காதலுண்டோ... மோகமில்லாத ஆணுண்டோ... ஆசையில்லாத பெண்ணுண்டோ... முத்தமில்லாத கலவியுண்டோ... பெண்ணைத் தேடிச் செல்லாத ஆணுண்டோ... ஆணுக்காக காத்திருக்காத பெண்ணுண்டோ... கன்னிகழியாமல் குழந்தைப் பிறப்பதுண்டோ... வலியில்லாமல் தாய்மையுண்டோ...   தனிமையில்லாத வலியுண்டோ... காயமில்லாத காதல் தோல்வியுண்டோ... எனக்காக அவள் வர வாய்ப்புண்டோ... என் வலி தீர வழியுண்டோ....   பெண்ணே... இன்னும் நம் காதல் தோற்கவில்லை... ஆதலால்... இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்... நீ என்னைத் தேடி

Read More