காதலில்லாமல் உலகமேயில்லை… – #கவிதை
ஒன்று சேர வேண்டி மட்டுமே வருவதல்லவே காதல்... பிரிந்தே போனாலும் தோற்காதே இந்தக் காதல்... எவ்வளவு சண்டைகள் வந்தாலும் மறக்கடிக்கும் இந்தக் காதல்... முறிந்தே போனாலும், நினைத்து நினைத்து புன்னகைக்க வைக்குமே காதல்... சேர்ந்திருந்தால், உலகே நம் காலடியில் என நினைக்கத் தூண்டுமே இந்தக் காதல்... சேராதிருப்பின்னும், அது நன்மைக்கே என புரியவைக்கும் நல்ல காதல்... கேள்விக்குள்ளான வாழ்விலும் கூட ஒளிவீசுமே காதல்... தோற்றால், உலகையே இருட்டாகும் இந்தக் காதல்... மரணத்தின் நுழைவுவாயிலை கூட, முத்தமிட துணியவைக்கும் இந்தக் காதல்... ஏனென்று தெரியாமலே, வரும் இந்தக் காதல்... யாரிடமும் சொல்லாமலேயே போய்விடுமே இந்தக் காதல்... மீண்டும் மீண்டும் யார் மேலாவது பிறக்குமே இந்தக்
Read More