Friday, March 29, 2024
Home > #கவிதை (Page 3)

காதலில்லாமல் உலகமேயில்லை… – #கவிதை

ஒன்று சேர வேண்டி மட்டுமே வருவதல்லவே காதல்... பிரிந்தே போனாலும் தோற்காதே இந்தக் காதல்... எவ்வளவு சண்டைகள் வந்தாலும் மறக்கடிக்கும் இந்தக் காதல்... முறிந்தே போனாலும், நினைத்து நினைத்து புன்னகைக்க வைக்குமே காதல்... சேர்ந்திருந்தால், உலகே நம் காலடியில் என நினைக்கத் தூண்டுமே இந்தக் காதல்... சேராதிருப்பின்னும், அது நன்மைக்கே என புரியவைக்கும் நல்ல காதல்... கேள்விக்குள்ளான வாழ்விலும் கூட ஒளிவீசுமே காதல்... தோற்றால், உலகையே இருட்டாகும் இந்தக் காதல்... மரணத்தின் நுழைவுவாயிலை கூட, முத்தமிட துணியவைக்கும் இந்தக் காதல்... ஏனென்று தெரியாமலே, வரும் இந்தக் காதல்... யாரிடமும் சொல்லாமலேயே போய்விடுமே இந்தக் காதல்... மீண்டும் மீண்டும் யார் மேலாவது பிறக்குமே இந்தக்

Read More

குறியறுத்து வாரீர் – #கவிதை

இந்நேரம்... விந்து தள்ளும் குறியாய் இருந்திருந்தால்... அறுத்தெரிந்திருப்பேன்... இறைவன்... எனக்கு யோனியைப் படைத்துவிட்டான்... நெஞ்சில் மயிறு மட்டுமிருந்தால் இந்நேரம் அறுத்தெரிந்திருப்பேன்... இறைவன்... எனக்கு பால் சுரக்கும் முலையைப் படைத்துவிட்டான்...   என் யோனியினுள்... நாற்றமெடுக்கும் விந்தினை நுழைக்கத்தான்... எத்தனை எத்தனை குறிகள் அலைகின்றன...   என் முலையை கசக்கிப்பிழிய... பண்டமென நினைத்து அதனைச் சுவைக்க... எத்தனை எத்தனை உதடுகள் காத்திருக்கின்றன...   என் குறியினை துணைக்கு அழைக்காமல்... திட்டக்கூட... யோக்கியதையில்லாத... ஆணினமே... இதோ என் அறைக்கூவல்... இந்தப் பொட்டை காத்திருக்கிறாள்... குறியறுத்துவரும் ஆடவனுக்காக... வீரமுள்ள ஆண் மக்களே... தீராணியிருந்தால்... தைரியமிருந்தால்... குறியறுத்து வாரீர்.. என் மனதை தருகிறேன்... வருவீரா??? – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை 29, 2020 மதியம் 01:30 மணி…

Read More

வாழ்நாள் காதலாய்… – #கவிதை

இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டாய்... என்னை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாய்... உன் மேல் சத்தியம் செய்துவிட்டேன்... உன்னிடம் வாக்கு ஒன்றைக் கொடுத்துவிட்டேன்... இல்லாதிருந்தால்... நீ போன இடத்திற்கே... உன்னுடனே வந்திருப்பேன்... உன் முகத்தை மறக்கவே நினைக்கிறேன்... ஒவ்வொரு நாளும்... ஆனால்... உன் நினைவில்லாமல் கழிய மறுக்கிறது... ஒவ்வொரு நொடியும்...   உன்னை நினைக்காத நாளில்லை... நீயில்லாமல் நான் நானாகயில்லை... அன்று உன் உடலிலே உயிரில்லை... எனக்கு அன்று முதல், ஏனோ நிம்மதியில்லை... நீயில்லாத உலகில் வாழ என்னால் ஏனோ முடியவில்லை... நீ மறைந்தபின்னே எதிலும் ஏனோ எனக்கு நாட்டமில்லை... மரணத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்காத நாளுமில்லை... ஆனால்... கடவுளுக்கு அதனைக் கொடுக்க ஏனோ மனமில்லை... இப்பிரிவை ஏற்றுக்கொள்ள ஏனோ எனக்கு சக்தியில்லை... உன்னைப் பிரிந்த எனக்கு

Read More

கனவு உருமாற… செயல் மனதார…

கனவிலிருக்கும் வீச்சு... நினைவில் இல்லை... நினைவிலிருக்கும் வீச்சு... உணர்வில் இல்லை... உணர்விலிருக்கும் வீச்சு... இலக்கில் இல்லை.... இலக்கிலிருக்கும் வீச்சு... தன்னம்பிக்கையில் இல்லை... தன்னம்பிக்கையிலிருக்கும் வீச்சு... பயிற்சியில் இல்லை... பயிற்சியிலிருக்கும் வீச்சு... முயற்சியில் இல்லை... முயற்சியிலிருக்கும் வீச்சு... செயலில் இல்லை... செயலில்லிருக்கும் வீச்சு... போதுமானதாய் இல்லை... கனவு... நினைவாக வேண்டும்... நினைவு... உணர்வாக வேண்டும்... உணர்வு... இலக்காக வேண்டும்... இலக்கு... தன்னம்பிக்கையாக வேண்டும்... தன்னம்பிக்கை... பயிற்சியாக வேண்டும்... பயிற்சி... முயற்சியாக வேண்டும்... முயற்சி.... செயலாக வேண்டும்... அந்தச் செயலே வெற்றியைக் கொடுக்கும்...   இருக்க வேண்டும்... கனவு உருமாற... செயல் மனதார... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை

Read More

ஜாதிகளால் ஜோதியானது… நம் காதலும்… -#கவிதை

நம் காதலுக்கு எமனாய் வந்தது ஜாதி... வெல்ல முடியவில்லை, நாம் அதனுடம் மோதி... ஜாதியை இங்கே ஆக்கிவிட்டார்கள், காதலுக்கான தகுதி... வென்று கரம்பிடிக்க எண்ணினேன் மதியால்... துவளாமல் போராடியும் துவண்டுக்கிடக்கிறேன் விதியால்... இருமனம் திருமணத்தில் சேர, எவனெவனோ தரவேண்டியிருக்கிறது அனுமதி... நம்மைப் பிரித்தால் ஏன் அவனுக்கு கிடைக்கிறது வெகுமதி... உலகிற்குச் சொல்கிறார்கள், நம் பிரிவை வைத்து, ஒரு சேதி... சமூகம் ஏனோ கடைப்பிடிக்கிறது, அநீதியைக்கண்டும், அமைதி... நம் காதலும் கரைந்துப்போனது... நம் மனமும் நிம்மதியிழந்துப்போனது... இந்த ஜாதிகளால்... ஜோதியானது... நம் காதலும்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… மே

Read More