Friday, April 26, 2024
Home > ஒண்ணுமில்ல (Page 3)

ஒண்ணுமில்ல… பகுதி 32

முப்பத்தி ஒன்றாவது பகுதியின் லிங்க்... சோபனா என்னுடன், என் அலுவலகத்தில் பணிப்புரியும் பெண். தமிழ்நாட்டில், திருச்சி ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்டவள். நானும் அவளும் ஒரே ப்ராஜெக்ட்டில் வேலை செய்கிறோம். அவள் புனேயில் டிரைனிங் முடித்து இந்த ப்ராஜெக்டிற்காக புதிதாக வந்திருக்கிறாள். நானும் சூசனும் தான் இவளை போனில் இண்டர்வியூ செய்தோம். அப்போது அவள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்று தெரியாது. இங்கே வந்த சில நாட்களில் நான் மட்டுமே தமிழ் தெரிந்தவள் என்பதால்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 31

முப்பதாவது பகுதியின் லிங்க்... ஒரு ஃபுல் பாட்டிலையும் காலி செய்துவிட்டேன். எத்தனை சிகரெட் புகைத்தேன் என்றே தெரியவில்லை. போதை தலைக்கு ஏறி, சோபாவிலேயே உறங்கிவிட்டேன். கடந்த இரண்டு மூன்று நாட்களாக இப்படித் தான் ஒரே குடியாகப் போய்க்கொண்டிருகிறது. நடந்த எல்லாவற்றை தாத்தாவிடம் எப்படிச் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே சோபனா ஏற்பாடு செய்துக் கொடுத்த ரூமிலேயே எவ்வளவு நாள் தான் அடைந்துக்கிடப்பது? எங்காவது வெளியில் சென்று வரலாம் என்று அவ்வப்போது தோன்றும். ஆனால்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 30

இருபத்திஒன்பதாவது பகுதியின் லிங்க்... மணி பத்தை நெருங்கையில் தாஸ் போன் அடித்தார், “சார். வந்துட்டேன்” என்றார். நான் அந்த டீக்கடையை அடையாளம் சொல்லி அங்கே வந்து என்னை அழைத்துக்கொள்ளுமாறு கேட்டுகொண்டேன். தாஸ் என்னை பிக்கப் செய்ய வரும் வரை இன்றைக்கு நான் செல்லும் இடங்களைப் பற்றி அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்குள் தாஸ் வந்துச் சேர்ந்தார். வந்தவர், ராமசாமி ஐயா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். ஐயாவும், தாஸின் குடும்பத்தைப் பற்றி நலம் விசாரித்தார். “நல்ல பையன் நம்ம

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 29

இருபத்திஎட்டாவது பகுதியின் லிங்க்... முதல் துளியை ரூசிப்பதற்குள், “தம்பி” என்று, ஒரு குரல் கேட்டது, கூடவே, என் தோளில் யாரோ தட்டுவதைப் போலிருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். ராமசாமி ஐயா என் பின்னே நின்று, என் தோளைத்தட்டி என்னை அழைத்தார். “ஐயா. நீங்களா?” என்றேன். “என்ன தம்பி. தலையில, கையில எல்லாம் கட்டு கட்டியிருக்கிங்க” என்றார் பதற்றமாக. இவரிடம் உண்மையைச் சொல்லலாம் என்று தான் முதலில் என் மனதில் தோன்றியது. ஆனால் சுற்றி நிறைய நபர்கள் இருந்ததால் எனக்கு

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 28

இருபத்திஎழாவது பகுதியின் லிங்க்... தேவியின் நினைவிலே அன்றைய இரவு கழிந்ததில் என்னால் காலையில் எழ முடியவில்லை. மருந்துகளின் வீரியம் குறைந்து எனக்கு சற்றே வலி தெரிய ஆரம்பித்தது. சோம்பலாக எழுந்து மொபலைத் தேடினேன். வழக்கம்போல சார்ஜ் இல்லாமல் இருந்தது. சார்ஜரை எடுத்து சார்ஜ் போட்டுவிட்டு, முகம் கழுவி, காலைக்கடனை முடித்துவிட்டு, பல் துலக்கி, குளித்து தயாராகி இன்று தாஸுடன் என்று பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலை எடுத்து சரிப் பார்த்துக்கொண்டேன். தாஸ் பத்து

Read More