Saturday, April 20, 2024
Home > #ஒண்ணுமில்ல (Page 2)

ஒண்ணுமில்ல… பகுதி 37

முப்பத்தி ஆறாவது பகுதியின் லிங்க்... இரவு காய்கறிக்கடையை வியாபாரத்திற்கு தயார் செய்துக்கொண்டிருந்தப்போது, என் பேத்தி, தேவி போனில் அழைத்தாள். நலம் விசாரிப்பிற்குப் பிறகு, என்னிடம் ஒரு விசயம் சொல்ல வேண்டும் என்றும், நாளை மதியத்திற்கு மேல் விட்டிற்கு வருகிறேன் என்றாள். மேலும், சில நாட்களுக்கு என்னுடன் அங்கேயே தங்கப் போகிறாள் என்றும் சொன்னாள். நான் கடை எடுத்து வைக்கும் அவசரத்தில் இருந்ததால், சரி வாம்மா நேரில் பேசிக்கொள்ளலாம் என்று போனை வைத்துவிட்டேன். மீண்டும்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 36

முப்பத்தி ஐந்தாவது பகுதியின் லிங்க... நான் கோபமாக பேசிக்கொண்டிருந்தப் பொழுதே இன்ஸ்பெக்டர் கோபமாக அவர் சீட்டிலிருந்து எழுந்தார். “என்னாமா விட்டா பேசிக்கிட்டே போகற” “நீ எந்த ஸ்டேசனுல யார மயக்கி புகார் கொடுத்திருக்கையோ அவங்க அந்த புகார விசாரிப்பாங்க. என் ஸ்டேசன் லிமிட்ல இருக்கிற உன் கம்பெனி எச்.ஆர் உன் மேல புகார் கொடுத்திருக்கார். அத நான் விசாரிப்பேன். இல்ல மேல நடவடிக்கை எடுப்பேன். உன்னைய ரிமேண்டு கூட பண்ணுவேன்” என்றார். “என்ன சார். நீங்க

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 35

முப்பத்தி நான்காவது பகுதியின் லிங்க்... அந்தேரி காவல் நிலையத்திற்குள் தயக்கத்துடனே சென்றோம். காவல் நிலையத்திற்குச் சென்ற அனுபவம் இதற்கு முன் எனக்கு இருந்ததில்லை. அதனால் யாரை சந்திக்க வேண்டும் என்று தெரியவில்லை. போலிஸ் ஸ்டேசன் மாதிரியே தெரியவில்லை. சந்தக்கடை மாதிரி பெரும் கூட்டமிருந்தது. அருகிலேயே அந்தேரி புறநகர் இரயில் நிலையமும், அந்தேரி மெட்ரோ இரயில் நிலையமும் இருந்ததால், அந்த இடமே பெரும் கூட்டமாக இருந்தது. அந்தேரி இரயில் நிலையத்திற்கு அருகிலேயே இந்த

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 34

முப்பத்தி மூன்றாவது பகுதியின் லிங்க்... “அந்தேரி போலிஸ் ஸ்டேசம் மே ஆவோ” என்று ஒரு ஆண் குரல் கேட்டது. என்னவென்று கேட்பதற்குள் போனை கட் செய்துவிட்டான் அந்த ஆசாமி. மீண்டும் தாத்தாவின் எண்ணிற்குப் போன் அடித்தப் பொழுது போன் ஸ்விட் ஆஃப் என்று வந்தது. சோபனாவைப் பார்த்தேன். யார் போனில் பேசியிருப்பார்கள். ஒருவேளை போலிஸாராக இருக்குமோ? இல்லை வேறு யாராவதாக இருக்குமோ? எத்றகாக அந்தேரி போலிஸ் ஸ்டேசனுக்கு வரச் சொல்கிறார்கள்? “அத தான் டி நானும்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 33

முப்பத்தி இரண்டாவது பகுதியின் லிங்க்... எதற்கு இத்தனை மிஸ்டு கால்கள் வந்திருக்கிறது, தாத்தாவுக்கு ஏதோனும் மருத்துவ உதவி தேவைப்பட்டிருக்குமோ? நான் குடித்துவிட்டு தூங்கியதால் ஏதோனும் விபரீதமாகியிருக்குமோ? என்று எனக்குள் பயமும் துக்கமும் ஒருசேர வந்தது. அப்படி ஏதேனும் ஆகியிருந்தால், என் வாழ்நாள் முழுவதும் அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியாதே. என் சிந்தனைகள் எங்கெங்கோ அலைப்பாய்ந்தன. என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்ன நடக்கப்போகிறது? என ஒன்றும் புரியாமல் சோபனாவைப் பார்த்தேன்.

Read More