Saturday, April 20, 2024
Home > #காதல்கதை (Page 2)

ஒண்ணுமில்ல… பகுதி 39

முப்பத்தி எட்டாவது பகுதியின் லிங்க்... இதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த போதே, அந்தேரி போலிஸ் ஸ்டேசனுக்கு வந்து சேர்ந்திருந்தேன், அந்த இன்ஸ்பெக்டருடன். ஏதோ கொலைக் குற்றவாளியை அழைத்துக்கொண்டுப் போவதைப் போல் என்னை உள்ளே அழைத்துச் சென்றனர். யாரையோ திருப்திப் படுத்தவே இந்த இன்ஸ்பெக்டர் இவ்வாறெல்லாம் செய்கிறான் என்று எனக்கு இத்தனை வருட அனுபவத்தில் எளிதாகப் புரிந்தது. இந்த இன்ஸ்பெக்டருக்குப் பின்னால் இருக்கிறது யார் என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு யாரிடம் உதவி கேட்கலாம் என்று

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 38

முப்பத்தி எழாவது பகுதியின் லிங்க்... அந்த இன்ஸ்பெக்டர் என்னருகில் வந்து, “சார், உங்களையும் விசாரிக்க வேண்டும். நீங்க இப்ப எங்கக் கூட ஸ்டேசன் வரைக்கும் வரனும்” என்றான். “உடை மாற்றிக்கொண்டு வரலாமா? இல்லை அப்படியே வர வேண்டுமா?” என்று நக்கலாகக் கேட்டேன். கடுப்புடன், “சரி. போய் மாத்திக்கிட்டு வாங்க” என்றான். நான் மீண்டும் மீண்டும் தேவிக்கு போன் அடித்தேன். அவள் போனை எடுக்கவில்லை. இவள் இந்த நேரத்தில் இப்படி போன் எடுக்காமல் இருக்கிறாளே என்று கொஞ்சம்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 37

முப்பத்தி ஆறாவது பகுதியின் லிங்க்... இரவு காய்கறிக்கடையை வியாபாரத்திற்கு தயார் செய்துக்கொண்டிருந்தப்போது, என் பேத்தி, தேவி போனில் அழைத்தாள். நலம் விசாரிப்பிற்குப் பிறகு, என்னிடம் ஒரு விசயம் சொல்ல வேண்டும் என்றும், நாளை மதியத்திற்கு மேல் விட்டிற்கு வருகிறேன் என்றாள். மேலும், சில நாட்களுக்கு என்னுடன் அங்கேயே தங்கப் போகிறாள் என்றும் சொன்னாள். நான் கடை எடுத்து வைக்கும் அவசரத்தில் இருந்ததால், சரி வாம்மா நேரில் பேசிக்கொள்ளலாம் என்று போனை வைத்துவிட்டேன். மீண்டும்

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 36

முப்பத்தி ஐந்தாவது பகுதியின் லிங்க... நான் கோபமாக பேசிக்கொண்டிருந்தப் பொழுதே இன்ஸ்பெக்டர் கோபமாக அவர் சீட்டிலிருந்து எழுந்தார். “என்னாமா விட்டா பேசிக்கிட்டே போகற” “நீ எந்த ஸ்டேசனுல யார மயக்கி புகார் கொடுத்திருக்கையோ அவங்க அந்த புகார விசாரிப்பாங்க. என் ஸ்டேசன் லிமிட்ல இருக்கிற உன் கம்பெனி எச்.ஆர் உன் மேல புகார் கொடுத்திருக்கார். அத நான் விசாரிப்பேன். இல்ல மேல நடவடிக்கை எடுப்பேன். உன்னைய ரிமேண்டு கூட பண்ணுவேன்” என்றார். “என்ன சார். நீங்க

Read More

ஒண்ணுமில்ல… பகுதி 35

முப்பத்தி நான்காவது பகுதியின் லிங்க்... அந்தேரி காவல் நிலையத்திற்குள் தயக்கத்துடனே சென்றோம். காவல் நிலையத்திற்குச் சென்ற அனுபவம் இதற்கு முன் எனக்கு இருந்ததில்லை. அதனால் யாரை சந்திக்க வேண்டும் என்று தெரியவில்லை. போலிஸ் ஸ்டேசன் மாதிரியே தெரியவில்லை. சந்தக்கடை மாதிரி பெரும் கூட்டமிருந்தது. அருகிலேயே அந்தேரி புறநகர் இரயில் நிலையமும், அந்தேரி மெட்ரோ இரயில் நிலையமும் இருந்ததால், அந்த இடமே பெரும் கூட்டமாக இருந்தது. அந்தேரி இரயில் நிலையத்திற்கு அருகிலேயே இந்த

Read More