Friday, April 19, 2024
Home > #காதல் (Page 2)

வலிதீர வழியுண்டோ… – #கவிதை

காற்றில்லாமல் புயல் வருவதுண்டோ... மேகங்கள் இல்லாத மழையுண்டோ... இருளில்லாத இடத்தில் ஒளி தேவையுண்டோ... பறவைகளில்லாத வனமுண்டோ... மீன்களில்லாத கடலுண்டோ... இலையில்லாத மரமுண்டோ... அனுயில்லாத உயிருண்டோ... கனவில்லாத உறக்கமுண்டோ... கண்ணீரில்லாத அழுகையுண்டோ... வார்த்தைகளில்லாத கோபமுண்டோ...   ஆண்மையில்லாத பெண்மையுண்டோ... பெண்மையில்லாத ஆண்மையுண்டோ... காதலில்லாத பெண் மனமுண்டோ... வலியினை மறைக்காத ஆண் மனமுண்டோ... காமமில்லாத காதலுண்டோ... மோகமில்லாத ஆணுண்டோ... ஆசையில்லாத பெண்ணுண்டோ... முத்தமில்லாத கலவியுண்டோ... பெண்ணைத் தேடிச் செல்லாத ஆணுண்டோ... ஆணுக்காக காத்திருக்காத பெண்ணுண்டோ... கன்னிகழியாமல் குழந்தைப் பிறப்பதுண்டோ... வலியில்லாமல் தாய்மையுண்டோ...   தனிமையில்லாத வலியுண்டோ... காயமில்லாத காதல் தோல்வியுண்டோ... எனக்காக அவள் வர வாய்ப்புண்டோ... என் வலி தீர வழியுண்டோ....   பெண்ணே... இன்னும் நம் காதல் தோற்கவில்லை... ஆதலால்... இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்... நீ என்னைத் தேடி

Read More

வருவாளா…? என் மனைவியாக அவள்…??? – #கவிதை

பட்டாம்பூச்சியாய் வந்தாள்... தேநீயாய் அங்குமிங்கும் சுற்றினாள்... தெரிந்தவர்களுடன் பேசினாள்... எனோ என்னைப் பார்த்து சிரித்தவள்... என்னருகில் வந்தாள்... வண்டியிலே சாய்ந்துக்கொண்டாள்... என்னருகில் நின்றவரிடம் பேசினாள்....   அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை நான்... யாரென்றே தெரியாத, அவள் மீது கொண்ட வெட்கத்தால்...   பேச்சுவாக்கில் அவ்வப்போது அவரை சீண்டினாள்... சீண்டலில், என்னையும் துணைக்கு அழைத்துக்கொண்டாள்... செய்வதறியாது, நான் நெளிய... அவளை ஒரக்கண்ணால் பார்க்க... அதனை அவள் பார்க்க... ஒன்றும் நடக்காததைப் போல நான் நெளிய... அதை அவள் கண்டுகொள்ள... நான் மாட்டிக்கொண்டு விழிக்க... அவன் என்னைப் பார்த்து... மீண்டும் சிரித்தாள்...   என் பார்வை மங்கியது... அவளைத் தவிர ஏதும் கண்ணுக்குத் தெரியவில்லை... அவள்

Read More

அடியே பொண்டாட்டி… – #கவிதை

அடியே பொண்டாட்டி... நீயே என் வழிகாட்டி... நீயே என் நாட்காட்டி.... நீயே என் திசைக்காட்டி... நீயே என் வாழ்வின் படகோட்டி...   அடியே பொண்டாட்டி.... இனி போட மாட்டேன் உன்னுடன் போட்டி... என் இதயம் இனி பனிக்கட்டி... நீ அதை உருக்கும் தீச்சட்டி... நீ என்னை அடக்கும் பாம்பாட்டி... நம் பிள்ளைகளின் முலையூட்டி...   அடியே பெண்டாட்டி... ஆட மாட்டேன் வாலாட்டி... இனி உன்னை மிரட்டி... நினைக்க மாட்டேன் வைப்பாட்டி... துரத்த மாட்டேன் உன்னைவிரட்டி...   அடியே பொண்டாட்டி... உன் காலில் போட்டேன் நான் மெட்டி... உன் நெற்றியிலே குங்குமம் சூட்டி... உன் தலையிலே பூச்சூட்டி... ஒட்டுமொத்த ஊரைக்கூட்டி.... கொண்டாடினேன் அதையொட்டி... திருமணமொன்னும் நிகழ்வொட்டி...   அடியே பொண்டாட்டி... நீயே

Read More

காதல் என்னும் பேரலை – #கவிதை

புன்னகை உணர்ச்சியைத் திறக்கும்... உணர்ச்சி காதலைத் திறக்கும்... காதல் முத்தத்தைத் திறக்கும்... முத்தம் காமத்தைத் திறக்கும்... காமம் கூடலைத் திறக்கும்... கூடல் உச்சத்தைத் திறக்கும்... உச்சம் மனநிம்மதியைத் திறக்கும்... நிம்மதி நல் வாழ்க்கையைத் திறக்கும்... வாழ்க்கை உலகத்தை திறக்கும்... உலகம் நம் அறிவை திறக்கும்... அறிவு பொருளைத் திறக்கும்... பொருள் மேண்மையைத் திறக்கும்... மேண்மையே புன்னகயைத் திறக்கும்... பெண்ணின் புன்னகையே... இங்கே காதலின் திறவுகோல்...   காதல் என்றென்றும் புரிந்துக்கொள்ளவே முடியாத ஒரு புன்னகை... புரிந்துக்கொண்டால்... அது நினைவே கொள்ள முடியாத ஒர் நினைவலை... அதுவே காதல் என்னும் பேரலை... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை 28,

Read More

அது காதலாய்… – #கவிதை

பெண்ணின் புன்னகை கிளர்ச்சியைத் தூண்டும்... அதனை உணர நல்ல பயிற்சி வேண்டும்... அந்தப் பயிற்சி நல்ல முயற்சியை தூண்டும்... முயற்சியே காதலை வெளிக்காட்ட உதவும்... வெளிக்காட்டிய காதலில் தான் அன்பே பிறக்கும்... அன்பின் பிறப்பில் காதல் துவங்கும்... காதல் துவங்கியபின்னே புரிதல் துவங்கும்... புரிதல் திருமணமென்னும் புதயலைக் கொடுக்கும்... தீயவனுக்கும், கயவனுக்கும் அது கசக்கும்... நல்லவனுக்கும் வல்லவனுக்கும் அது இனிக்கும்... ஆம்... இனிக்கும்... கடைசிவரை... அது காதலாய்... – உ.கா. அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை… ஜூலை 28, 2020 மாலை 04.30 மணி…  

Read More