Thursday, April 25, 2024
Home > கவிதை > நீக்க மற நிறைந்திருக்கிறாய்… – #கவிதை

நீக்க மற நிறைந்திருக்கிறாய்… – #கவிதை

நீ இல்லாத நாட்களை,

நான் கடக்கப்போகும் வழி தெரியவில்லை…

நீ தந்துவிட்டுச் சென்ற வலி,

என் உயிருள்ள வரை மறையப்போவதுமில்லை…

நீ எனக்குமில்லை…

நான் உனக்குமில்லை…

இனி நமக்கு எதிர்காலமேயில்லை…

உன் நினைவுகளை என்னுள் சுமக்கிறேன்

கருவாக…

அது வளர்ந்து என் இதயத்தின்னுள்ளே இருக்கட்டும்

வடுவாக…

உலகமே ஊரடங்கால் நின்றிருக்க…

என் மனமோ உன் நினைவுகளிலேயே,

சுற்றிச் சுற்றி வந்திருக்க…

யாருக்கும் அடங்காமல்…

எதனையும் ஏற்க மனமில்லாமல்…

பிரிவு கொடுத்த வலியை தாங்க முடியாமல்…

கலங்கிப்போய் நிற்கிறேன்…

மீளாத்துயரில் தவிக்கிறேன்…

எல்லோரையும் தவிர்க்கிறேன்…

மாற்றங்களைத் தேடித் தேடி அலைகிறேன்…

வெறுமையாய்…

வெற்றியில்லாமல்….

ஆனால்…

நீ மட்டும் இன்னும்…

நீக்க மற நிறைந்திருக்கிறாய்…

என் மனதிலே…

 .கா.

அணுஅணுவாய் நினைவிருப்பாய்… என் நினைவிருக்கும் வரை

மே 12, 2020

காலை 11:58 மணி…