Friday, March 29, 2024
Home > ஒண்ணுமில்ல > ஒண்ணுமில்ல… பகுதி 06

ஒண்ணுமில்ல… பகுதி 06

ஐந்தாவது பகுதியின் லிங்…

இதில் நான் மும்பை வந்தக் கதை சுவாரஸ்யமானது.

அந்தக் கதை என்னவென்றால்…

ரெட்டப்பால சம்பவத்திற்குப் பிறகு, நான் எங்காவது சென்று வந்தால் தான் சரி பட்டுவரும் என்று குமாருக்கு தோன்றியது. ஆனால், கோபியும்-தயாவும் தாங்களும் கூட வருவோம் என்று அடம் பிடிப்பார்கள் என்று குமாருக்குத் தெரியும்.

மும்பைக்கு போகலாம் என்று சொல்லிவிட்டு, நாம நாலு பேரும் கோவா போகலாம் என்று கோபி-தயாவிடம் குமார் சொல்ல, அவர்கள் கண்கள் விரிந்தன. அவர்களும் கனவு காண ஆரம்பித்துவிட்டனர். ஏன் என்றால் எங்கள் குழாமின் பல வருட கனவு கோவாவிற்கு செல்ல வேண்டும் என்பது. ஆனால், அவர்களது மனைவிமார்களின் அனுமதி கிடைக்காததால் இவ்வளவு நாட்களாக நாங்கள் விரும்பும் கோவாவிற்குச் செல்லவே முடியவில்லை எங்களால். அதனால், இந்த சந்தர்பத்தை தவறவிடக் கூடாது என்று கோபி-தயாவிற்கு ஆசை பிறந்தது.

அதனால், இதனை மட்டும் எப்படியாவது வீட்டில் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குமார் அவர்களிடம் சொன்னான்.

ஏன் என்று அவர்கள் கேட்க, கோவா என்றால் என் வீட்டில் விட மாட்டார்கள் என்று ஒரு பொய்யை சொன்னான். அவர்களும் நம்பி டிக்கெட் வரை புக் செய்துவிட்டார்கள். குமார் போகப்போவதில்லை என்று தெரிந்தே தனக்கும் டிக்கெட் புக் செய்தான்.

பின்பு ஒரு மாஸ்டர் பிளான் போட்டு எல்லோருக்கும் ஆப்பு வைத்தான்.

தன் மனைவியிடம், “உன் கிட்ட பொய் சொல்லிட்டு போக எனக்கு விருப்பமில்லை. நாங்க மும்பை போகல. கோவாவுக்குப் போறோம்” என்று சொல்ல குமாரின் மனைவி வெடித்துச் சிதறிவிட்டாள் கோபத்தில்.

குமாரின் மனைவியும், கோபி-தயாவின் மனைவிமார்களும் இணைப்பிரியா தோழிகள். இந்தத் தகவலை அப்படியே கோபி-தயாவின் மனைவிமார்களுக்கு  தகவலாக கொடுத்துவிட அவர்களும் ரூத்ர தாண்டவம் ஆட, அவர்கள் மூவரும் மும்பைக்கு வருவது கட்டானது.

டிக்கெட் காசு எல்லாம் வேஸ்ட். இருந்தாலும் குமார் போட்ட மாஸ்டர் பிளானில் வெற்றி பெற்றுவிட்டான். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து நான் மட்டும் மும்பை போக வேண்டும் என்று வற்புறுத்துவதைப் போன்ற தோற்றத்தை குமார் உருவாக்கிவிட்டான்.

என் நண்பன் குமாருக்கு, மும்பையில் சில வேலைகள் இருந்தது. ரொம்ப நாட்களாக அவனால் அங்கு போய் வர முடியாமல் அந்த வேலைகள் கிடைப்பிலே கிடந்தது.

ஏதோ புது மிசின் எல்லாம் வந்திருக்கிறது. அது எப்படி இருக்கின்றது என்று பார்த்துவிட்டு, அதனை நாமும் வாங்க வேண்டும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பான். அந்த மிசின் வாங்கிய பின் தான் நாங்கள் தனியாக தொழில் துவங்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தோம்.

இப்போது குமாருக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.

என்னை தனியாக மும்பைக்கு அனுப்பியது மாதிரியும் ஆனது. எங்களது எதிர்கால தொழில் திட்டத்திற்காக மிசின்களைப் பார்க்க மும்பை சென்றது மாதிரியும் ஆனது.

எனக்கு உதவுவதற்குத் தான் மும்பையில் தாஸை கைடாக குமார் ஏற்பாடு செய்தான்.

****************

(நான்காவது பகுதியின் தொடர்ச்சியாக இதனை எடுத்துக்கொள்ளவும்)

முதலில் நியூஸ் பேப்பர் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அப்போது என்ன நடந்தது என்றால்…

ஏழாவது பகுதியின் லிங்க்

– மீண்டும் சந்திப்போம் நாளை இரவு 08.00 மணிக்கு…

எழுத்து – பட்டிக்காடு